Facebook Pixel கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சேர்ந்த மூவர் உள்பட 14 பேர் உயிரிழப்பு | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சேர்ந்த மூவர் உள்பட 14 பேர் உயிரிழப்பு

Dinamani Tiruvallur

|

May 01, 2025

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் தங்கும் அறை களுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.

கொல்கத்தா/கரூர், ஏப். 30:

மத்திய கொல்கத்தாவில் நெரிசல்மிக்க பகுதியான புர்ராபஜாரில் நான்கு மாடி கட்டடத்தில் தங்கும் அறைகளுடன் கூடிய ஒரு ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. ஹோட்டலின் 42 அறைகளில் 88 பேர் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் ஹோட்டல் அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு வேகமாகப் பரவியது. இதனால், அங்கு தங்கியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவசரமாக வெளியேற முயன்றனர். தீ விபத்தில் சிக்கியும், கட்டடத்தின் ஜன்னல்கள் வழியாக கீழே குதித்ததில் பலத்த காயமடைந்தும் 14 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 10 மணி நேர தீவிரப் போராட்டத்துக்குப் பிறகு புதன்கிழமை அதிகாலை தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பெரும்பாலானவர்கள் கொழுந்துவிட்ட எரிந்த தீயின் கரும்புகையால் மூச்சுத் திணறி இறந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு

உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Tiruvallur

மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?

மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வர் விஜய் மக்களை ஏமாற்றி விட்டதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Tiruvallur

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tiruvallur

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tiruvallur

4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!

நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி

time to read

1 min

May 14, 2026

Dinamani Tiruvallur

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Tiruvallur

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆண்டர்ஸை வெறியேற்றினார் கெளகஃப்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினார்.

time to read

1 min

May 14, 2026

Translate

Share

-
+

Change font size