Facebook Pixel எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பிரதமரின் இலங்கைப் பயணம்! | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பிரதமரின் இலங்கைப் பயணம்!

Dinamani Tiruvallur

|

April 04, 2025

லங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) முதல் மேற்கொள்ளவுள்ள மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

- ம.ஆ. பரணிதரன்

பிரதமரான பிறகு 2019-இல் இலங்கைக்கு மோடி சென்றார். அதன் பிறகு அந்நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது. இடைப்பட்ட ஆண்டுகளில் இரு தரப்பும் புவிசார் அரசியல், பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் பொருளாதார ரீதியிலான பல மாற்றங்களைச் சந்தித்துள்ளன.

வரலாற்றுபூர்வ உறவு: இந்தியாவும் இலங்கையும் நீண்ட பொருளாதார வரலாற்றைக் கொண்டவை. இந்தியாவின் முதல் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) இலங்கையுடன் 1998 இல் கையொப்பமாகி 2000-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

இருப்பினும், வர்த்தக புள்ளிவிவரங்களின்படி 2018-இல் 4.67 பில்லியன் டாலராக இருந்த இலங்கைக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 2023 -இல் 3.62 பில்லியன் டாலராக சரிந்தது. இதே காலகட்டத்தில் இலங்கையின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 2018 -இல் 1.32 பில்லியன் டாலரிலிருந்து 2023-இல் 991 மில்லியன் டாலராக குறைந்தது.

பயணத்தின் நோக்கம்: இலங்கையில் ஏப். 5-இல் அதிபர் அநுர குமார திசாநாயக, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் ஒப்பந்தங்கள் கையொப்பம், முக்கியத் தலைவர்களுடனான சந்திப்புகள் நடக்கின்றன. ஏப். 6-இல் அனுராதபுரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புனித ஸ்ரீ மகா போதியில் வழிபடுகிறார்.

கொழும்பில் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, காணொலி வாயிலாக திருகோணமலையின் சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டத்தை மோடி தொடங்கி வைக்கிறார்.

வடகிழக்கு நகரமான திருகோணமலையில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அதனால், இந்த இடத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்தை இந்தியா கேந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தியாகத்தின் உருவம் !

உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மேக்கேதாட்டு அணை கூடாது

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஜூன் 25 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஜூன் 25 வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

தங்கம் பவுனுக்கு ரூ.3,040 குறைவு

ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனையானது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

விபி-ஜி ராம் ஜி திட்ட அமலாக்கம்: நாடு முழுவதும் 100 அதிகாரிகள்

விபி-ஜிராம் ஜி எனப்படும் வளர்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (125 நாள் வேலைத் திட்டம்) ஜூலை 1- ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்

time to read

1 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஈரான் - அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்

ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை இரவு கையொப்பமிடப்பட்டது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

மாஸ்கோ எண்ணெய் நிலையத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து, உக்ரைன் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.

time to read

1 min

June 19, 2026

Translate

Share

-
+

Change font size