Try GOLD - Free
வணிகப்போர் வளையத்தில் இந்தியா!
Dinamani Nagapattinam
|April 17, 2025
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.
அரசாட்சியாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும் வரி விதிக்காமல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், வரியை அளவோடு விதிக்க வேண்டும். தேன் அடையிலிருந்து தேன் எடுப்பதுபோல மக்களைத் துன்புறுத்தாமல் வரி விதித்து ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் தமிழ்ப்புலவர்கள் மன்னர்களுக்கு அறிவுறுத்தினர்.
வேலொடு நின்றான் இடுஎன்றதுபோலும் கோலொடு நின்றான் இரவு (குறள் 552)
அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருள் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், எல்லாவற்றையும் தா என்று கேட்பதைப் போன்றதாகும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
அரசியல் நெறிவாழ்வார் எவ்வாறு குடிமக்களிடம் வரி கேட்டு வாங்க வேண்டும் என்பதற்கு சங்க இலக்கியத்தில் ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. காய்ந்து முற்றிய நெல்லை அறுத்து கவளம் கவளமாக யானைக்கு உண்ணக் கொடுத்தால் 'மா' அளவுள்ள சிறிய நிலத்தில் விளைவதும் பல நாளைக்கு உணவாகும். அவ்வாறின்றி, 100 வயல் அளவுள்ள பெரிய நிலமாயினும், யானை தானே வயலுக்குள் புகுந்து உண்டால் வாய்க்குள் போவதை விட அதன் கால்களில் பாழாவதே மிகுதியாகும். இவ்வாறு, காய்நெல் அறுத்து கவளம் கொளினே' என புறநானூற்றுப் பாடலில் கூறப்படுகிறது. மக்கள் நலம் நாடும் அரசுகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஏழை, பாட்டாளி மக்கள் இதனால் மிகப்பெரும் துயரங்களை தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி ஆட்சி செய்வோர் கவலைப்படுவதில்லை. அதிகாரம் செய்யும் கார்ப்பரேட்டுகளும் கவலைப்படுவதில்லை.
பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கின. 1990-களின் பிற்பகுதியில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததாகக் கூறப்பட்டது.
எப்போதும் ஆண்டுக்கு இரண்டு சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் இப்போது சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகள், உலகமயமாக்கலால் பயனடைந்த உலக நாடுகளுக்கு ஏமாற்றமாகவும், பின்னடைவாகவும் அமைந்துள்ளன.
This story is from the April 17, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 27, 2026
Dinamani Nagapattinam
அதிமுக மாநில நிர்வாகிகள் 4 பேருக்கு புதிய பொறுப்பு
அதிமுகவில் கொள்கைப் பரப்பு துணைச் செயலர்கள், மகளிரணி இணைச்செயலர் என மொத்தம் 4 பேர் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 27, 2026
Dinamani Nagapattinam
பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 27, 2026
Dinamani Nagapattinam
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Dinamani Nagapattinam
சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
1 min
June 27, 2026
Dinamani Nagapattinam
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 mins
June 27, 2026
Dinamani Nagapattinam
முன்னேறியது மொராக்கோ
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
1 min
June 26, 2026
Dinamani Nagapattinam
தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்
தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Nagapattinam
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Dinamani Nagapattinam
ஆழ்கடல் விபத்துகள்!
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
2 mins
June 26, 2026
Translate
Change font size
