Try GOLD - Free
புதிய தலைமைக்கான கல்வி!
Dinamani Nagapattinam
|March 29, 2025
நமக்குத் தேவையான தலைமை என்பது நிறுவனத் தலைமை அல்ல. மக்களுக்கு வழிகாட்டும் செயல்பாட்டுத் தலைமை. அந்தத் தலைமை மக்களின் மீது நம்பிக்கையும், அன்பும் கொண்டிருக்க வேண்டும். அப்படி மக்களிடம் மாறா அன்பும், நம்பிக்கையும் கொண்டு மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
-
லைமை என்பது ஒரு மனிதரிடம் இருக்கிற மக்களை வசீகரிக்கும் ஒருங்கிணைக்கும் குணங்கள், திறன்கள், ஆற்றல்களாகும். தலைமை என்பது அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.
ஒவ்வொருவரும் தாங்கள் பொறுப்பில் இருக்கும் அமைப்பில், நிறுவனத்தில் தங்கள் குணங்களையும், திறன்களையும், ஆற்றல்களையும் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவற்றின் தாக்கங்களை அவர் செயல்படுகிற நிறுவனத்தில், அமைப்பில் நம்மால் பார்க்க இயலும்.
இந்தக் குணங்களும், திறன்களும், ஆற்றல்களும் தாமாகவே எவருக்கும் வந்துவிடாது. வலிந்து முயற்சி செய்யும் தொடர் பயிற்சிகளின் மூலமே அவற்றைப் பெற முடியும். இவை அனைத்தும் வளர்ந்தால், உயர்ந்தால் செயல்படுகின்ற இடத்தில் வியாபிப்பதும், தளர்ந்தால் தளர்வதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இதில் மூன்று இடத்தில் தலைமைத்துவம் என்பது பெரும் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளது. ஒன்று, அரசுத் தலைமை; இரண்டு, சமூகத் தலைமை; மூன்று, சந்தைத் தலைமை.
இந்த மூன்றில் சந்தைத் தலைமையை வளர்க்கத்தான் உலகத்தில் பெரும் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாகத்தான் இன்று சந்தையில் வளர்ந்த, மேம்பட்ட உச்சம் பெற்ற தலைமையைப் பார்க்க முடிகிறது. ஆகையால்தான், சந்தை வலுவடைந்து அரசாங்கத்தையும், சமூகத்தையும் வயப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளது.
உலகம் வியக்கக்கூடிய அளவில் தலைமைத்துவக் குணங்கள், திறன்கள், ஆற்றல்கள் வளர்த்தெடுக்கப்படுவதை சந்தையில் நாம் பார்க்கிறோம். அதற்கான தொடர் ஆய்வுத்திட்டங்கள் வகுக்கப்பட்டுபெரும் நிதி செலவு செய்து நிறைவேற்றப்பட்டு அதன் விளைவுகளைப் பதிவு செய்து புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு நல்ல அரசியலை, ஆட்சியை, நல்ல நிர்வாகத்தைக் கட்டமைக்கத் தேவையான தலைமைத்துவக் கல்வி சந்தையில் இருக்கிற தலைமைக் கல்விபோல் இருக்கிறதா என்றால், 'ஆம்' என்று கூற முடியாது.
அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் எனக் கல்வித் திட்டங்கள் இருக்கிறதே என்று பலர் எண்ணக்கூடும். இது நம் அரசியல் எது சார்ந்தது, எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். ஓர் அறம் சார்ந்த அரசியலை எப்படி கட்டமைப்பது என்பதற்கான கல்வி இல்லை.
This story is from the March 29, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Translate
Change font size
