Facebook Pixel அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..! | Dinamani Kanchipuram - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

Dinamani Kanchipuram

|

January 14, 2026

அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!

- பழ.கருப்பையா

ஓரிரு வாரங்கள் படம் வெளியாவது தள்ளிப் போகுமே ஒழிய அதனால் கேடு ஒன்றுமில்லை! அந்தப் படம் சக்கையாக இருந்தாலொழிய, தணிக்கைக் குழு அந்தப் படத்தை ஓடவிடாமல் தடுத்து விட முடியாது!

தணிக்கைக் குழு என ஒன்று எந்தக் காலத்திலும் இருப்பதால், அதை மனத்தில் கொண்டுதான் படம் எடுக்க முடியும்!

அந்தப் படம் அடுத்த நிலை ஆய்வுக் காக ஏன் நிறுத்திவைக்கப்பட்டது என்று புரியாமலேயே, இசுடாலின் நடிகர் விசய்க்கு நேரக் கூடாதது நேர்ந்துவிட்டது போலவும், மைய அரசு மாற்றாரை வீழ்த்துவதற்கு சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை எனப் பல ஆயுதங்களை வைத்திருப்பதில், இப்போது தணிக்கைக் குழுவும் சேர்ந்திருக்கிறது என்று விசயின் மீது பரிவு மொழிகளைச் சொரிந்திருக்கிறார்! ஆடுகள் நனைகின்றன என்று ஓநாய்கள் அழுகின்றன!

இதுபோன்ற சலிப்புகளும், எரிச்சல்களும் முதலமைச்சர் தொடங்கி எளிய மனிதன் வரை எல்லாருக்கும் ஏற்படுபவைதான்!

மாநில அரசின் கீழ் தலைமைப் பதவியைப் பெறும் டிஜிபியால் குற்றம் தெளிவாகக் கண்டறியப்பட்ட நிலையில்கூட வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றால், 'வழுவில்லாச் செயல்பாட்டுக்கு உரியதாக நம்முடைய அரசியல் சாசன உருவாக்கம் இல்லை என்பதுதான் பொருள்!

அறிவு குறைந்த திருடர்கள் சங்கிலி அறுக்கவும், வீடேறிக் குதிக்கவும் போகிறார்கள்! சாமர்த்தியத்தில், சூழ்ச்சியில் கூடிய திருடர்கள் அரசியல்வாதியாகி அமைச்சர்களாகி விடுகிறார்கள்!

அந்தத் திருடர்கள் சட்டத்தின் பிடியில் மாட்டுகிறார்கள்! இந்தத் திருடர்கள் கையில்தான் சட்டமே இருக்கிறது!

மக்களுக்குத் தெளிவை உண்டாக்குவது அரசியல் கட்சிகளின் கடமை! மக்கள் சராசரி வாழ்க்கையில், பாடுகளோடு வாழ்ந்து களைத்துப் போகிறவர்கள்! குடியாட்சியின் சிறப்பே எதிர் அரசியலுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம்தான்!

ஆனால் நண்டு, சிண்டு உட்படப் பத்துப் பன்னிரண்டு கட்சிகள் ஆளும் கட்சிக்குக் கூட்டணி என்னும் நிலையில், 'ஆயுள் கைதிகளாக' மாறிவிடுகிறார்களே!

சவாரி முடிந்தால் குதிரை, இலாயத்திற்குப் போக வேண்டும்! தேர்தல் முடிந்தால் கூட்டணிக் கட்சிகள் தன் கட்சி அரசியலுக்குத் திரும்ப வேண்டும்!

MORE STORIES FROM Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Kanchipuram

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Kanchipuram

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Kanchipuram

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Kanchipuram

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Kanchipuram

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Kanchipuram

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை

பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Kanchipuram

4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!

நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி

time to read

1 min

May 14, 2026

Dinamani Kanchipuram

உரம் கையிருப்பு உள்ளது; அச்சத்தால் அதிக கொள்முதல் வேண்டாம்: மத்திய அரசு

'வரும் காரீஃப் பருவத்துக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளன.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size