Try GOLD - Free
நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூர்வமாக நிரூபணம்
Dinamani Kanchipuram
|June 20, 2025
விசாரணை அறிக்கையில் தகவல்
-
புது தில்லி, ஜூன் 19: நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னர் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது என்று உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தவறான நடத்தை, அவரைப் பதவி நீக்கம் செய்யும் அளவில் தீவிரமானது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்த போது, புது தில்லியில் எண்-30, துளக் கிரசண்ட் முகவரியில் அவர் வசித்த அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, வீட்டின் பொருள்கள் சேமித்து வைக்கும் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததை மீட்புக்குழுவினர் கண்டறிந்தனர். மறுநாள் அதிகாலையில் அறையில் இருந்து பணம் மாயமானது.
விசாரணைக் குழு: அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தா வாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த மார்ச் 22-ஆம் தேதி அமைத்தார்.
This story is from the June 20, 2025 edition of Dinamani Kanchipuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Dinamani Kanchipuram
3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
May 18, 2026
Dinamani Kanchipuram
விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி
தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Kanchipuram
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
May 18, 2026
Dinamani Kanchipuram
பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.
1 min
May 18, 2026
Dinamani Kanchipuram
அமைச்சர் பதவி அளித்தால் சிபிஐ விசாரணை கோருவோம்
குதிரை பேரத்தால் தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக, அமமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Kanchipuram
அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?
நிதியமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்
1 min
May 18, 2026
Dinamani Kanchipuram
பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு
பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி
1 mins
May 18, 2026
Dinamani Kanchipuram
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Kanchipuram
நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
2 mins
May 18, 2026
Translate
Change font size
