இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகளுக்கும் ஹமாஸ் பிரதிநிதிகளுக்கும் இடையே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் பைடன் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஸாவில் சண்டையை நிறுத்துவதற்காக இஸ்ரேலுக்கும், ஹமாஸýக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை மிக மிக நெருக்கத்தில் உள்ளது. இது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், வரும் திங்கள்கிழமை (மார்ச் 4) போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று நம்புகிறேன்.
அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், புனித ரமலான் மாதத்தில் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துவதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. இதன் மூலம், ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்களில் மேலும் பலரை விடுவிப்பதற்கான அவகாசம் கிடைக்கும் என்றார் ஜோ பைடன்.
இதற்கிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக பிரான்ஸ் தயாரித்துள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர்தான் அதனை தற்போது பரிசீலித்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி "ராய்ட்டர்ஸ்' நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியது.
This story is from the February 28, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 28, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அமித் ஷாவை பிரதமராக்க மோடி திட்டம்-அரவிந்த் கேஜரிவால்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அடுத்த பிரதமராக்கும் திட்டத்துடன் தற் போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கூறினார்.
நாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து வழிநடத்துவார்
'மக்களவைத் தேர்தல் முடிவில், பாஜக ஆட்சியமைக்கும். பிர தமர் நரேந்திர மோடி நாட்டை தொடர்ந்து வழிநடத்துவார்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
மத்திய ராஃபாவிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் பாலஸ்தீனா்களின் கடைசி புகலிடமாகத் திகழ்ந்த ராஃபா நகரின் மத்தியப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா
மும்பை இண்டியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
மக்களவைத் தேர்தல் பற்றி பொது விவாதம்: முன்னாள் நீதிபதிகளின் அமைப்பை ஏற்ற காங்கிரஸ்
மக்களவைத் தேர்தல் குறித்த பொது விவா தத்துக்கான ஓய்வு பெற்ற நீதி பதிகளின் அழைப்பை காங் கிரஸ் ஏற்பதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
பாஜக இல்லாத பாரதம்
நாட்டில் பாஜக இருக்கக் கூடாது என்று தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
புகார்களைப் புறக்கணித்த தேர்தல் ஆணையம்
தான் ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களுக்கு எழுதிய கடிதத்துக்கு தோ்தல் ஆணையம் பதிலளித்தது வியப்பளிப்பதாகவும், அதேவேளையில் தனது பல புகாா்களை அந்த ஆணையம் புறக்கணித்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.
போதைப் பொருள்களை கட்டுப்படுத்த தலைமைச் செயலர் ஆலோசனை
போதைப் பொருள்களை கட்டுப்படுத்து வது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்
‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசி வருகிறது; எனவே, பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மாட்டாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி
தமிழகத்தில் மாநில பாடத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 மாணவிகள் சதவீத மாணவ, தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சியைக் காட்டிலும் (91.39) 0.16 சதவீதம் அதிகம்.