97.31சதவீத வெற்றியுடன் அரியலூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அடுத்த இரு இடங்களைப் பிடித்துள்ளன. குறைந்த சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ஏப். 8 வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகளை சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராமவர்மா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
தேர்ச்சி 0.16% உயர்வு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 94,264 பேர் எழுதினர். அதில் 4 லட்சத்து 47,061 பேர் மாணவிகள் 4 லட்சத்து 47,203 பேர் மாணவர்கள். இவர்களில், 4 லட்சத்து 22,591 மாணவிகளும் (94.53%); 3 லட்சத்து 96,152 மாணவர்களும் (88.58%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களைவிட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 18,743 பேர் (91.55%) தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த கல்வியாண்டுடன் ஒப் பிடுகையில் (91.39), நிகழாண்டு தேர்ச்சி 0.16 சதவீதம் அதிகம்.
This story is from the May 11, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 11, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் உத்தரவு
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்
காஸா போா் தொடா்பாக ஹமாஸ் அமைப்புடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை
தைவானின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு ‘தண்டனை’யாக அந்தத் தீவைச் சுற்றி போா் ஒத்திகையைத் தொடங்கியதாக சீனா வியாழக்கிழமை அறிவித்தது.
ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க...
40 தொகுதிகளை வெல்லவே போராடும் காங்கிரஸ் - அமித் ஷா
காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்லப் போராடி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா விமா்சித்தாா்.
தீவிர மதவாதம் கொண்டது 'இந்தியா' கூட்டணி- பிரதமர் மோடி விமர்சனம்
தீவிர மதவாதம், ஜாதியம் மற்றும் குடும்ப அரசியலைத் தன்னுள் கொண்டது ‘இந்தியா’ கூட்டணி என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் பத்து நாள்களில் எண்ணப்படவுள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்துக்கு தலைவர்கள் கண்டனம்
முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய தடுப்பணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இளம் வழக்குரைஞர்கள் மீது அதிக நம்பிக்கை
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா
சென்னை அருகே கைப்பேசி ஆலை அமைக்கிறது கூகுள்
சென்னை அருகே ‘பிக்சல்’ கைப்பேசி ஆலையை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையை கூகுள் விரைவில் நடத்தவுள்ளது.