புது தில்லி/செகந்திராபாத், ஜூன் 17:
முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரர்களைச் சேர்க்கும் ‘அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான போராட்டம் மேலும் வலுத்துள்ளது.
3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பல்வேறு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் ரயில்களுக்குத் தீ வைக்கப்பட்டு, பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. 234 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 340 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. தெலங்கானாவின் செகந்தி ராபாதில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். பிகாரில் துணை முதல்வர், மாநில பாஜக தலைவர் ஆகியோரின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.
முப்படைகளில் 4 ஆண்டுகள் மட்டும் இளைஞர்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் தொடங்கிய போராட்டம், மேற்கு வங்கம், ஒடிஸா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
பிகார் தலைநகர் பாட்னாவில் ராணுவத்தில் சேர்வதற்கு பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் ஏராளமானோர் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
This story is from the June 18, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 18, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஐபிஎல் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்ய முடியாது
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை, ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் மட்டுமே தோ்வு செய்ய முடியாது என்று இந்திய கேப்டன் ரோஹித் சா்மா வியாழக்கிழமை கூறினாா்.
ஹைதராபாத் 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
பாலியல் குற்றச்சாட்டு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தேடப்படும் நபராக (லுக் அவுட்) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஷ்வரா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல பாஜக
ராஜ்நாத் சிங்
வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பு மாற்றப்படும் என்பது போன்ற பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக வியாழக்கிழமை புகாரளித்தது.
ஜூனில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த திட்டம்: கொள்கைக் குறிப்புகளை இறுதி செய்யும் பணி தீவிரம்
தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் மாதம் நடத்துவதற்காக அரசுத் துறைகள் தயாராகி வருகின்றன.
'நம்ம யாத்ரி' கால் டாக்ஸி செயலி அறிமுகம்
சென்னையில் அண்ணா பல்கலை. மாணவா்களால் உருவாக்கப்பட்ட ‘நம்ம யாத்ரி’ கால் டாக்ஸி (வாடகை வாகனம்) செயலி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்
பரமத்திவேலூரில் 112 டிகிரி பதிவு
ராகுல் பிரதமராக பாகிஸ்தான் ஆதரவு
பிரதமர் மோடி குற்றச்சாட்டு