உலகம் தோன்றி, மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, ·தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது. அதை ஒட்டியே தொழில்களும் தோன்றின, நாகரிகமும் வளர்ந்தது. அந்த வரிசையில் உலகம் முழுவதுமே வேளாண்மைக்கு அடுத்தபடியாக, நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்கியது. குறிப்பாக நாகரிகத்தில் முன்னோடிகளான, தமிழ் சமூகத்தில் இருந்த திறன்மிகு நெசவாளர்களின் கலைநயமிக்க படைப்புகள், உலக அளவில் புகழ்பெற்று விளங்கியது. ஆனால், கால ஓட்டத்தில், எந்திரங்களின் அதீத ஆதிக்கத்தால், நலிந்துவரும் பழம்பெரும் தொழில்களின் பட்டியலில் கைத்தறி நெசவும் உள்ளது. இதனால், கைத்தறி நெசவை நம்பியுள்ள இலட்சக்கணக்கான நெசவாளர் குடும்பங்கள் பாதிப்படைகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, அரசு மாவட்டம்தோறும் "கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை" ஏற்படுத்தி, பாரம்பரியமிக்க நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் வாழ்க்கையையும் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.
அதில் ஒன்றாக, பழமையையும், புதுமையையும் கலந்து, புதிய புதிய வடிவமைப்புகளை படைக்கும் வகையில் நெசவாளர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கின்றனர். பொதுவாகவே கைத்தறி துணிகளின் சிறப்பம்சமே, அதன் தரமும், நீண்டகால உழைப்பும்தான். நீங்கள் எத்தனை விலைபோட்டு மற்ற துணிகளை எடுத்தாலும், கைத்தறி இரகங்களுக்கான மதிப்பென்பது விலை மதிக்க முடியாதது. ஏனென்றால், அதில் ஒவ்வொரு நெசவாளரின் மாபெரும் உழைப்பும், கற்பனைத் திறனும் சரிபாதியாக கலந்துள்ளது. வரும் மாதங்கள் விழாக் காலங்களாக இருப்பதால் அதை முன்னிட்டு கைத்தறி துறையிலும், எண்ணற்ற புதிய இரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்ட சரகத்திலும் பல்வேறு துணி இரகங்கள் தனித்துவமாக, பெயர் பெற்று விளங்குகிறது.
இந்த விழாக் காலத்திலேனும், பொது மக்கள் கலைநயமும், தரமும் ஒருசேர இணைந்து காணப்படும் கைத்தறி துணிகளை, வாங்கிப் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திலும், அதற்கு வழிகாட்டும் வகையிலும், எந்தெந்த மாவட்டத்தில் என்னென்ன துணி இரகங்கள் தயாராகி விற்பனைக்கு வருகிறது என்பதை அறிய, முக்கியமான சில மாவட்டங்களை வலம் வந்தோம். கிடைத்த தகவல்களை வைத்து, ஒரு சுருக்கமான அறிமுகம் இதோ உங்களுக்காக..
காஞ்சிபுரம்:
This story is from the Thanga Mangai Oct-2022 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the Thanga Mangai Oct-2022 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.
வாழ்வியலும் பொருளியலும்!
மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.
துளியில் நிறைந்த கடல்!
இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.
கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!
அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இரவு எட்டு மணி. பெங்களூரைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, வழக்கம்போல தன் வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், ஏழு முறை சுடப்பட, அதில் கழுத்து, மார்பு, வயிறு என்று மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்து போனார்.