Poging GOUD - Vrij
சங்கப் புலவரின் சான்றாண்மை
Dinamani Tiruvallur
|July 20, 2025
பரிசில் பெற்று வாழும் சங்கப் புலவர்கள் புரவலர்களை வாழ்க்கையரேனும் எவர்க்கும் அஞ்சாது யாண்டும் மெய்யே கூறி அறம் நிலைக்கச் செய்யும் சான்றோராக விளங்கியதைப் புறநானூறு சிறப்பாகக் கூறும்.
அத்தகையோர் தங்களைப் பாடுவதைப் பெரும்பேறாக மன்னர்கள் கருதினர்; புலவரால் பாடப்பெற்றால் வீடுபேறு கிட்டும் என நம்பினர். 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப (புறம் 24-28) என்ற பாடல் வரிகளே அதற்குச் சான்றாகும். புலவர் பிசிராந்தையார் யாண்டு பலவாக நரையின்றி வாழ்நற்கு கூறும் பல காரணங்களுள் 'ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' (புறம். 191 வரி 6-7) என்பதை தலையாயக் காரணமாகக் கூறுவார். சான்றோர் பெருமையை இது உணர்த்தும். இத்தகு சான்றோருள் ஒருவராகத் திகழ்ந்தவர் கோவூர்கிழார் எனும் புலவர் பெருமகனார்.
அவர் காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் தமிழகத்தைத் தங்களுக்கே உரிமையானது என்ற தன்னல உணர்வுகொண்டு வாழ்ந்தனர். சிலசமயம் ஒரே குலத்தவரே தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதும் உண்டு. அவ்வகையில் சோழன் நலங்கிள்ளியையும் சோழன் நெடுங்கிள்ளியையும் குறிக்கலாம். இருவரும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டனர். அவர்களை அமைதிப்படுத்தி உயிர்களைச் சாவிலிருந்து மீட்க புலவர் கோவூர்கிழார் அம்மன்னர்களிடம் சென்று நாட்டில் அமைதி ஏற்படுத்த முனைந்ததைப் புறநானூறு 44 மற்றும் 45-ஆம் பாடல்களில் அறிய முடிகிறது.
Dit verhaal komt uit de July 20, 2025-editie van Dinamani Tiruvallur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை
டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
எண்ணமே வாழ்வு!
வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.
2 mins
January 08, 2026
Dinamani Tiruvallur
'ஆவின் பால் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை'
ஆவின் பால் பாக்கெட்டுகள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.
2 mins
January 08, 2026
Dinamani Tiruvallur
உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?
தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.
3 mins
January 08, 2026
Dinamani Tiruvallur
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசின் அனுமதி பெறுவதை வேண்டுமென்றே தாமதிக்கவில்லை என அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம், மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும்
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்த ராம.
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப் பதியக் கோரி அதிமுக மனு
தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
January 08, 2026
Translate
Change font size
