Poging GOUD - Vrij

வள்ளுவம் காட்டும் காந்தியம் வாழ்க

Dinamani Salem

|

November 20, 2025

கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை. அதில் மனிதன் முழுமை அடை வதற்கான தத்துவங்கள் அடங்கியுள் ளன. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். அதில் மனிதன் இறைவனை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற் கான வழிமுறைகள் அடங்கியுள்ளன. மனிதன் மனிதனுக்குச் சொன்னது என்று திருக்குறளைச் சுட்டுவர். இந்நூல் மனிதன் மாமனிதனாக உயர்ந்து இறைநிலையை அடைவதற்கான வழிமுறைகளை எளிமை யான தனது இரண்டு அடிகளில் படிப்படி யாக எடுத்துரைக்கிறது.

- அருணன் கபிலன்

திருக்குறள் நெறிகளை தம்வாழ்வில் பின்பற்றி உயர்ந்தோர் ஆல்பர்ட் சுவைட் சர், லியோ டால்ஸ்டாய், லாசரசு, சார்லஸ் கோவர், விண்டர்னிட்சு, ஜி.யு. போப் ஆகி யோர். அவருள் முதன்மையராகக் குறிப் பிடத் தகுந்தவர் மகாத்மா காந்தி. அவ ருடைய வாழ்வும் கொள்கைகளும் எக் காலத்துக்கும் ஏற்றவாறு அவர் பெயரி லேயே காந்தியம் என்னும் மரபாயிற்று. அது வள்ளுவத்தின் வேரிலிருந்து கிளைத் ததாகும். வள்ளுவம் உலகப் பொதுமறை ஆனதைப் போலவே காந்தியமும் உலகக் கொள்கையாக நிலைபெற்றுவிட்டது.

சர்வாதிகாரத்தின் கொடூரப் பிடி யிலிருந்து அடித்தட்டு மக்களை மீட்டுக் கொணரும் சமூகப் போராட்ட முறையாக மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதனும் தனக் குள்ளே கிளைத்திருக்கிற அறியாமைகளி லிருந்தும், மடமைகளிலிருந்தும் தானே விடுதலை அடைய முயல்கின்ற அகப் போராட்ட முறையாக - அறப்போ ராட்ட முறையாகக் காந்தியம் அமைந்தது. இதுவும் வள்ளுவத்தின் வெளிப்பாடே.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து கூடவே இணைந்து வந்த கொடுங்கோன் மையும், அடக்குமுறையும் அறியாமையும் முற்றிலும் வில(க்)கிக் கொள்ளக் கிடைத்த பெருநெறியாகக் காந்தியம் தோன்றியது.

அறிவியல் வான்நோக்கி நீண்டு கொண் டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி மரபிய லிலும் ஆன்மிகவியலிலும் ஆழ்ந்து கொண் டிருந்தார். உலகம் கணினியைக் கருவியாக்க முயன்று கொண்டிருந்த காலத்தில் இவர் கைராட்டையைக் கொண்டு புரட்சி செய் தார். அடிப்படையில் திருக்குறள் தான் உள் ளிருள் நீக்கும் விளக்காகத் தோன்றி மோகன் தாஸை மகாத்மா ஆக்கியது.

வாழ்வின் பொருள் தெரியாமல் அலைந்த மோகன்தாஸுக்கு நல்ல வழிகாட்டு நூலாக அமைந்தது வள்ளுவம். இயல்பாகவே வள்ளுவத்தின் கொள்கை கள் சிலவற்றோடு அவர் ஒன்றியிருந்தார்.

கடவுள் நம்பிக்கை, அறவழிநிற்றல், இல்வாழ்வு, வாழ்க்கைத் துணைந லம், அன்பு, செய்நன்றிப் பாங்கு, நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்க முடைமை போன்ற குணங்கள் இயல்பாக இருந்தபோதும் கூடவே தீவினையச்சம், கள்ளாமை, புலால் மறுத்தல், வாய்மை முதலியவற்றைப் பின்பற்ற மோகன்தாஸ் மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.

நாகரிகத்தின் பெயரால் மேற் கத்தியம் இந்திய மரபுகளைப் பழைமை என இகழ்ந்த வேளை யில் எது சரி என்பதைத் தேர்ந்து கொள்ள இயலாமல் தவித்தார். ஒவ்வொரு மனிதனுக்கும் நேரும் சகல வாழ்வியல் அவலங்களும் சாதாரண மனிதனாக இருந்த மோகன்தாஸுக்கும் நேர்ந் தன.

MEER VERHALEN VAN Dinamani Salem

Dinamani Salem

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Salem

Dinamani Salem

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Dinamani Salem

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Salem

இலங்கையில் சிக்கிய இந்தியப் பயணிகள் அனைவரும் மீட்பு

டித்வா புயலால் இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவித்த இந்தியப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Salem

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Salem

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Salem

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Salem

Dinamani Salem

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Salem

எண்ம கைது மோசடி வழக்குகள்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, டிச.1: நாடு முழுவதுமான எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) மோசடி வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க சிபிஐ திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Salem

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size