Poging GOUD - Vrij
அழிவின் விளிம்பில் கழுகுகள்!
Dinamani Pudukkottai
|September 06, 2025
தடைசெய்யப்பட்ட நீம்சலைடு, புளுநிக்ஸின் மற்றும் கார்புரோபென் ஆகிய மருந்துகளை கால்நடைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் செலுத்துவதால் அவை இறந்த பிறகு அவற்றின் மாமிசத்தை உண்ணும் கழுகுகள் அதிக அளவில் உயிரிழப்பதாக கழுகு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இயற்கையின் சுற்றுச்சூழலைக் காப்பதில் பறவைகளுக்கு தனி இடம் உண்டு. பறவைகளின் அரசனான கழுகுகள் சுற்றுச்சூழல் மாசடைதலைத் தடுக்கவும், இயற்கை விவசாயம், கிராமப்புற சூழல்களைத் தக்கவைக்கவும் மனிதர்களுக்கு உதவுகின்றன. குறிப்பாக, கரிமக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் அகற்றுவதில் அவை துப்புரவாளர்களாகச் செயல்படுகின்றன. அப்படிப்பட்ட அந்த இனம், உலகில் வேகமாக அழிந்து வருகிறது.
அசைவப் பறவையான கழுகு, பொது இடங்கள், காடுகளில் இறந்து கிடக்கும் விலங்குகளின் இறைச்சியை உண்டு, உலகின் தூய்மைப் பணியாளராக வானில் வலம் வந்து வனத்தையும், வனாந்திரத்தையும் தூய்மையாக வைத்து, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துகிறது. இறந்த கால்நடைகளை உண்டு, இதன் மூலம் மனிதர்களிடையே தொற்று நோய்கள் பரவுதலைத் தடுக்க உதவுகிறது. வெறி நாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற மிகவும் நச்சுத்தன்மையுள்ள நோய்க்கிருமிகளின் பாதிப்புகளிடமிருந்து காத்துக்கொள்ளும் திறன் கழுகுக்கு உண்டு.
இந்தியா முழுவதும் மொத்தம் ஒன்பது வகையான கழுகு இனங்கள் உள்ளன. அதிகமாகக் காணப்படும் வெள்ளைத்தலை கழுகு முதல் காட்டில் வாழும் சிவப்புத் தலை கழுகு வரையிலான இனங்கள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழலைக் காப்பதில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. இமயமலை கிரிஃபோன் மற்றும் தாடியுள்ள கழுகு போன்றவை பொதுவாக இமயமலையின் உயரமான பகுதிகளில் காணப்படுகின்றன.
எகிப்திய கழுகு கிட்டத்தட்ட நாடு முழுவதும் காணப்படுகிறது. மெல்லிய அலகுள்ள கழுகுகள் வடக்கு சமவெளி களிலும், அஸ்ஸாம் பள்ளத்தாக்கிலும் காணப்படுகின்றன. இந்தியக் கழுகுகள் இந்தியாவின் மத்திய மற்றும் தீபகற்ப பகுதிகளில் பரவியுள்ளது. சினீரியஸ் மற்றும் யூரேசியன் கிரிஃபான் இனக் கழுகுகள் இந்தியாவுக்கு குளிர்கால விருந்தினர்களாக வருகின்றன. அனைத்து வகையான கழுகுகளும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் பட்டியலிடப்பட்டுள்ளன.
விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நச்சு மருந்துகளால் இறக்கும் எலிகள் மற்றும் கால்நடைகளை உண்பதால் இறத்தல், உயர் அழுத்த மின்கம்பிகளில் சிக்கி மடிதல், காடுகளின் அழிவு முதலியன கழுகு இனங்கள் அருகி வருவதற்குக் காரணங்களாக சொல்லப்படுகின்றன.
Dit verhaal komt uit de September 06, 2025-editie van Dinamani Pudukkottai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Pudukkottai
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Pudukkottai
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Pudukkottai
நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்
நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Pudukkottai
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Dinamani Pudukkottai
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Translate
Change font size
