Poging GOUD - Vrij
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு- ஒரு பார்வை!
Dinamani Coimbatore
|March 13, 2025
குழந்தைகள் பெறும் விகிதம் குறைவதால், மக்கள் தொகை குறைந்திருக்கும் நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுவது, தென்னிந்திய மாநில மக்களைத் தண்டிக்கக் கூடிய வகையில், மக்கள்தொகையில் நீதியை நிலைநாட்டி முன்னேற்றப் பாதையில் சென்ற தென்மாநிலங்களுக்கு அநீதியை இழைக்கின்ற செயலாகும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மறுவரையறை செய்யப்பட வேண்டும் என இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 82 மற்றும் 170 வலியுறுத்துகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில், இந்தியாவில் மூன்று முறை 1951, 1961, 1971 ஆண்டு நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தது.
மேற்கூறிய கணக்கெடுப்புகளின்படி, இந்தியாவின் மக்கள்தொகை முறையே அன்றைய காலகட்டத்தில் 36 கோடி, 43.9 கோடி மற்றும் 54.8 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 1952-இல் நடந்த முதல் தேர்தலில் 494 தொகுதிகள் அமைக்கப்பட்டன.
அடுத்து நடந்த கணக்கெடுப்புகள் மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இந்த எண்ணிக்கை 522 மற்றும் 543 என உயர்ந்தது. அடுத்து நடைபெற இருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவமும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஆகவேதான், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அப்படி எந்தப் பிரச்னையும் எழாது என்று பாஜக சொல்கிறது. இந்தித் திணிப்பு, மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழக அரசியல் கட்சியினரும், தமிழக மக்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.
தற்போது இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்ற மறுசீரமைப்பின் மூலமாக மத்திய அரசு, மாநில அரசுகளின் மீதான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. மும்மொழித் திட்டத்தினை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், நிதியைத் தர முடியாது என்று கூறுவது அடக்குமுறை. கூட்டாட்சிக்கு எதிரானது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக இயற்றி அதன் மூலம் பெரும் பயனும் அடைந்திருக்கிறது.
Dit verhaal komt uit de March 13, 2025-editie van Dinamani Coimbatore.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Coimbatore
Dinamani Coimbatore
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 48 பேர் காயம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 48 பேர் காயமடைந்தனர்.
1 mins
January 18, 2026
Dinamani Coimbatore
கருவறைக் கடவுளரைக் காட்டிடும் சுதைச் சிற்பங்கள்!
\"ஊருக்கு அடையாள மையமாக விளங்குவது கோயில்.
2 mins
January 18, 2026
Dinamani Coimbatore
வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வங்கதேசத்தை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
January 18, 2026
Dinamani Coimbatore
திருக்குறள் காட்டும் அரசியல் நெறி
உலக மொழிகளில் தமிழ் மொழியில் இருப்பதுபோல் நீதி நூல்கள் எந்த மொழியிலும் இல்லையென்றும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதலில் கூறியவர் வீரமாமுனிவர்.
2 mins
January 18, 2026
Dinamani Coimbatore
மண்ணின் கலைகளைச் சுமப்பேன்...
\"மண்ணின் கலைகளைச் சுமப்பதிலும், அடுத்தத் தலைமுறைக்குக் கடத்து திலும் எனக்கு அதிக அளவில் விருப்பம்.
1 min
January 18, 2026
Dinamani Coimbatore
உச்சகாரம் இரு மொழிக்கு உரித்தே...
பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே தோன்றிய பூச்சியினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்த உயிரினமே கொசுவாகும்.
1 mins
January 18, 2026
Dinamani Coimbatore
பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.
1 min
January 18, 2026
Dinamani Coimbatore
‘ஒளியை - ஒலியாகவும், ஞானமாகவும் காண்கிறேன்’
இந்தோனேசியாவில் ஜகார்தாநகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் வர்த்தகம் மற்றும் அரசியல் பிரிவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெனோ சஃபைன்.
3 mins
January 18, 2026
Dinamani Coimbatore
ஜீவாவின் சுவாசம் தமிழ்!
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது.
3 mins
January 17, 2026
Dinamani Coimbatore
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
58 பேர் காயம்
1 mins
January 17, 2026
Translate
Change font size
