Facebook Pixel மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா | Dinamani Chennai - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா

Dinamani Chennai

|

November 27, 2025

குடியரசுத் தலைவர் பெருமிதம்

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா

'உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் பயணத்தில் வேகமாக முன்னேறுகிறது இந்தியா; இது, நமது நாடாளுமன்ற அமைப்பு முறையின் வெற்றிக்கு உறுதியான சான்று' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

'மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியாவின் லட்சியங்களைப் பறைசாற்றும் நாடாளுமன்றம், உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது' என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கடந்த 1949-ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நவ. 26-ஆம் தேதி அரசமைப்புச் சட்ட தினமாக கடந்த 2015-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் (சம்விதான் சதன்) வரலாற்றுச் சிறப்புமிக்க மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, இரு அவைகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தேசத்தின் அடையாளம்: விழாவில் குடியரசுத் தலைவர் பேசியதாவது: நமது அரசமைப்புச் சட்டம், நாட்டின் பெருமைக்குரிய ஆவணம்; தேசத்தின் அடையாளம். காலனித்துவ மனநிலையைப் புறந்தள்ளி, தேசியவாத கண்ணோட்டத்துடன் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழிகாட்டும் ஆவணமாகும்.

இந்தியாவில் நாடாளுமன்ற அமைப்புமுறையை ஏற்பதற்கு ஆதரவாக அரசியல் நிர்ணய சபையில் முன்வைக்கப்பட்ட வலுவான வாதங்கள் இன்றளவும் பொருத்தமானவை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதுடன், ஆழமான அரசியல் சிந்தனைக்கு ஆக்கபூர்வ மரபையும் வளர்த்தெடுத்துள்ளனர். எதிர்கால ஒப்பீட்டு ஆய்வுகளின்போது, இந்திய ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் பொன்னெழுத்துகளால் விவரிக்கப்படும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி இந்தியா வேகமாக பயணிப்பது, நமது நாடாளுமன்ற அமைப்புமுறையின் வெற்றிக்கு வலுவான சான்றாகும்.

MEER VERHALEN VAN Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்டுடன் 'டிரா' செய்தார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பயன்பாட்டுக்கு வந்தது | எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அதிநவீன வாகன நிறுத்தும் மையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்தும் மையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

எடையைக் குறைக்க உகந்தது கோடை

இயற்கை மருத்துவர்கள்

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Chennai

பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது

எஸ்.பி.வேலுமணி தரப்பு

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை

தேர்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழர் கட்சி துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம்: முதல்வர்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 19, 2026

Listen

Translate

Share

-
+

Change font size