ஐஐடிகள் ராஜேஸ்வரி களின் ராஜ்ஜியம் ஆக வேண்டும்...
DINACHEITHI - NELLAI
|June 10, 2025
சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவது என்பது செயற்கரிய செயல். கல்வியே ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆங்கிலேயர் தயவில் அதை இப்பிரிவினர் அடைந்தபோது, மேலாதிக்க சாதியினருக்கு அது எட்டிக்காயாகக் கசந்தது. ஒடுக்கப்பட்டு ஓர் கல்வியில் உயர்வதைத் தடுக்க எத்தனையோ தடைக் கற்களை அவ்வப்போது போட்டு வைத்தார்கள். சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்று கூட விதி இருந்தது.
-
அதுமட்டுமின்றி, பிற பிரிவினர் எளிதில் நுழைய முடியாதவாறு ஐஐடி உள்ளிட்ட பொறியியல் நிறுவனங்களையும், எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களையும் அமைத்துக் கொண்டு, அதிலே குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.
திராவிட இயக்க தன்னெழுச்சியால் தடைகள் யாவும் நொறுக்கப்பட்டன. மருத்துவம், பொறியியல், சட்டப் படிப்பில் பார்ப்பனர் அல்லாத பிரிவினர் எளிதாக நுழைந்தனர். ஆனாலும், பழங்குடியினர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. குறிப்பாக, ஐஐடியில் அவர்கள் நுழைவு அத்திப்பூத்தாற்போலவே நிகழ்ந்தது.
இச்சூழலில், சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, புற்றுநோயால் தந்தையை இழந்த நிலையிலும், போலித் தொழில் செய்த தாய், தமையனின் உதவியோடு ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில், பழங்குடியினர் பிரிவில் இந்திய அளவில் 417-ஆவது இடம் பிடித்து ஐஐடியில் சேர்வதற்குத் தகுதி பெற்றுள்ளார்.
எட்டாம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளியில் படித்த ராஜேஸ்வரி, குடும்பச் சூழல் காரணமாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கருமந்துறை கிராமத்தில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பத்தாம் வகுப்பில் 500-க்கு 438 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 600-க்கு 521 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
Dit verhaal komt uit de June 10, 2025-editie van DINACHEITHI - NELLAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - NELLAI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - NELLAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
DINACHEITHI - NELLAI
முன்னாள் மத்திய மந்திரி சிவராஜ் பாட்டீல் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
1 min
December 13, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
விரிவாக்கம் திட்டத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
December 13, 2025
DINACHEITHI - NELLAI
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.11,718 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ .
1 min
December 13, 2025
DINACHEITHI - NELLAI
ரஜினிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்
1 min
December 13, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் 3 நாட்கள் நீடிப்பு
19-ந் தேதி மாதிரி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 12, 2025
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min
December 11, 2025
Translate
Change font size

