Facebook Pixel ஐஐடிகள் ராஜேஸ்வரி களின் ராஜ்ஜியம் ஆக வேண்டும்... | DINACHEITHI - NELLAI - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ஐஐடிகள் ராஜேஸ்வரி களின் ராஜ்ஜியம் ஆக வேண்டும்...

DINACHEITHI - NELLAI

|

June 10, 2025

சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவது என்பது செயற்கரிய செயல். கல்வியே ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆங்கிலேயர் தயவில் அதை இப்பிரிவினர் அடைந்தபோது, மேலாதிக்க சாதியினருக்கு அது எட்டிக்காயாகக் கசந்தது. ஒடுக்கப்பட்டு ஓர் கல்வியில் உயர்வதைத் தடுக்க எத்தனையோ தடைக் கற்களை அவ்வப்போது போட்டு வைத்தார்கள். சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்று கூட விதி இருந்தது.

அதுமட்டுமின்றி, பிற பிரிவினர் எளிதில் நுழைய முடியாதவாறு ஐஐடி உள்ளிட்ட பொறியியல் நிறுவனங்களையும், எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களையும் அமைத்துக் கொண்டு, அதிலே குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.

திராவிட இயக்க தன்னெழுச்சியால் தடைகள் யாவும் நொறுக்கப்பட்டன. மருத்துவம், பொறியியல், சட்டப் படிப்பில் பார்ப்பனர் அல்லாத பிரிவினர் எளிதாக நுழைந்தனர். ஆனாலும், பழங்குடியினர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. குறிப்பாக, ஐஐடியில் அவர்கள் நுழைவு அத்திப்பூத்தாற்போலவே நிகழ்ந்தது.

இச்சூழலில், சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, புற்றுநோயால் தந்தையை இழந்த நிலையிலும், போலித் தொழில் செய்த தாய், தமையனின் உதவியோடு ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில், பழங்குடியினர் பிரிவில் இந்திய அளவில் 417-ஆவது இடம் பிடித்து ஐஐடியில் சேர்வதற்குத் தகுதி பெற்றுள்ளார்.

எட்டாம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளியில் படித்த ராஜேஸ்வரி, குடும்பச் சூழல் காரணமாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கருமந்துறை கிராமத்தில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பத்தாம் வகுப்பில் 500-க்கு 438 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 600-க்கு 521 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது

time to read

1 min

February 27, 2026

DINACHEITHI - NELLAI

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை

time to read

1 mins

February 26, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - NELLAI

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

time to read

2 mins

February 24, 2026

Translate

Share

-
+

Change font size