Prøve GULL - Gratis
தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியே தமிழ்த்தேசிய கட்சிகளின் இணைவு முயற்சிக்கு காரணம்
Virakesari Daily
|May 22, 2025
உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியே தமிழ்த்தேசியக் கட்சிகள் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் போக பிரதான காரணம்.
அதேநேரம் கடந்த காலங்களில் தனித்து ஆட்சியமைத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று ஆளுக்கொரு பக்கம் பிரிந்து தொங்கு சபை அமைவதற்கு ஏதுநிலையை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்னராக இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அநுர அலை பலமாக அடித்த அதேவேளையில் தமிழ்க்கட்சிகள் தமக்குள் பிளவுபட்டு தமது தோல்விக்கு தாமே காரணமாகினர்.
அதன் விளைவாக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் என்றுமில்லாத ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருந்தது. அதன் பின்னரான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அலை அடங்கி விட்டதாக பலரும் தெரிவித்துவரும் நிலையில் கடந்த கால உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சிசபைத் தேர்தலிலும் யாழ் மாவட்டத்தில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது என்பதே உண்மை.
அதனை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் பாராளுமன்ற தேர்தலோடு உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு மனதை தேற்றிக்கொள்கின்றனரே தவிர தமிழர் தாயகத்தில் ஒரு தேசியக் கட்சி அதிகப்படியான ஆசனங்களைப் பெறுவதும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்து ஆட்சியமைக்க முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தியிருப்பதும் இதுவே முதற்தடவை.
கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகியன அதிக ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தன. பெரும்பாலான சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆட்சியமைத்திருந்தது.
அதேநேரம் எதிரணியிலும் தமிழ்த்தேசிய கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பலமான நிலையில் இருந்து சிறப்பாக சபைகளை கொண்டு சென்றிருந்தன. ஆனால் இன்று பல சபைகளில் பிரதான தமிழ்த்தேசிய கட்சிகள் இரண்டும் இணையாமல் ஆட்சியமைப்பது சாத்தியமற்றுக் காணப்படுகின்றது.
Denne historien er fra May 22, 2025-utgaven av Virakesari Daily.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

