Prøve GULL - Gratis

ஆண்டிமடத்தில் மார்ச் 8இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடத்திட அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

Viduthalai

|

February 14,2023

அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஆண்டிமடம் வன்னியர் திருமண மண்டபத்தில் 5.2.2023 ஞாயிறு மாலை 6:00 மணி அளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திர சேகரன் தலைமை வகித்தார். 

ஆண்டிமடத்தில் மார்ச் 8இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடத்திட அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

ஆண்டிமடம்,பிப்.14

ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட செயலாளர் க. சிந்தனைச் செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.மாவட் டத் தலைவர் விடுதலை நீலமேகன், மண்டல தலைவர் இரா. கோவிந்த ராஜன் மண்டல செயலாளர் சு. மணி வண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அறிவன், மாவட்ட ப.க.  தலைவர் தங்க. சிவமூர்த்தி மண்டல இளைஞரணி செயலாளர் பொன் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் க.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்து பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற கருத்துகளை கூறினர். 

பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நீண்ட இடை வெளிக்குப் பிறகு ஆண்டி மடத்தில் தலைவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வருகைதருவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தியாகும். 90 வயதிலும்  நாட்டை சுற்றிச் சுற்றி மக்களுக்காக உழைக்கும் மகத்தான தலைவரின் சமூகநீதிப்பயணத்தை வெற்றிபெறச் செய்வது நமது கடமய்யாகும். இந்த நிகழ்சியை கிராமப்புற மாநாடு போல் நடத்திட வேண்டும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விளக்கி சிறப்புரையாற்றினார். 

கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் கூட்டம் நடைபெற நிதி உதவி தருவதாக அறிவித்துள்ளனர். 

ப.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார். 

தீர்மானங்கள்

சமூக நீதியை பாதுகாக்கவும் திராவிட மாடல் ஆட்சியின் தத்து வத்தை விளக்கியும் பரப்புரை பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பெரும் முயற்சியை இந்த கலந்துரையாடல் கூட்டம் பாராட்டி, வரவேற்று, நன்றி தெரிவிக்கிறது.

FLERE HISTORIER FRA Viduthalai

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்

மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

time to read

1 mins

JUNE 06,2025

Viduthalai

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு

அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

Viduthalai

முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து

காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை

தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்

வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

Viduthalai

ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:

வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது

இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.

time to read

1 min

JUNE 06,2025

Translate

Share

-
+

Change font size