Prøve GULL - Gratis
வங்கிகளின் சேவைத் தரம் தொடரும்!
Dinamani Villupuram
|June 28, 2025
வங்கிகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுவரும் எண்மப் புரட்சியில் பல பழைமை அனுபவங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. காணாமல் போனதில் முக்கியமானது, வங்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே நிலவிய தனிப்பட்ட தொடர்பு (பர்சனல் டச்) என்ற பாலமாகும்.
முதாயத்தில்குறிப்பிட்ட அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு மட்டும் வங்கிசார்ந்த வசதிகள் என்ற சித்தாந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அந்த வசதிகளை அனைத்துத் தரப்பினரும் அனுபவிக்கும் வகையில் பரவலாக்கப்பட்டது, நம் பொருளாதார சரித்திரத்தில் ஓர் அரிய நிகழ்வாகும். நாட்டின் பொருளாதார முன்னேற்றம், அனைத்துத் தரப்பினரையும் சார்ந்ததாக இருத்தல் வேண்டும் என்ற காந்திய கொள்கைக்கு இந்த நிகழ்வுகள் வலுசேர்த்தன. குடிசைத் தொழில் முதல் விவசாயத் துறை வரையிலான பயனாளிகள், நாளுக்குநாள் பெருகிவருவது வங்கித் துறையின் பயன்பாடுகள், சமுதாயத்தில் பெரும்பாலான வர்களைச் சென்றடைந்ததற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
உலக பொருளாதார தளத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நம் நாட்டின் பிரதிபிம்பமாக வங்கிகளின் செயல்பாடுகள் பார்க்கப்படுகின்றன. வங்கிகளின் செயல்பாடு, இருசக்கர வாகனத்தைப் போன்றது. சேமிப்பாளர்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாக பெற்று, தேவைப்படுவோருக்கு, அந்தப் பணத்தை கடனாக வழங்கி, லாபம் ஈட்டுவதுதான் வங்கிகளின் அடிப்படைச் செயல்பாடாகும். இந்தச் செயல்பாட்டில், சக்கரங்களின் வேகசுழற்சி ஒன்றுக்கொன்று ஈடு கொடுத்து, வாகனம் தடையின்றி நகர்வதற்கு வழிவகுக்க வேண்டும். அந்த செயல்பாடுகளில், எந்தப் பக்கம் சுணக்கம் ஏற்பட்டாலும், அது வங்கித் துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
எடுத்துக்காட்டாக, கடன் தேவைகளுக்கு ஏற்றபடி, டெபாசிட் தொகை வளரவில்லை என்றால், அந்த குறையை நிறை செய்ய வங்கிகள் மற்ற நிதி அதாரங்களை அணுக வேண்டி இருக்கும். சில சமயங்களில் அவற்றுக்கான செலவினங்கள் அதிகமாக இருக்கலாம் அல்லது சில நிதிஆதாரங்களின் காலக்கெடு தேவைக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கலாம். இதனால், வங்கிகளின் லாபம் பாதிப்படைவதுடன், அவற்றின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படும்.
அண்மையில், வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசும் போது, வங்கிகளின் டெபாசிட் தொகை, முந்தைய அண்டைவிட 11.1 சதவீத அளவுக்குத்தான் வளர்ந்துள்ளது. 17.4 சதவீத கடன் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது சற்று கவலை அளிக்கும் நிலையாகத் தோன்றுகிறது' என்ற கருத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு செய்துள்ளார். அண்மைக் காலங்களில், வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகைகளை (பல்க் டெபாசிட்) அதிக வட்டிக்கு டெபாசிட்டாக பெறுகின்றன.
Denne historien er fra June 28, 2025-utgaven av Dinamani Villupuram.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Villupuram
Dinamani Villupuram
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Villupuram
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Villupuram
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Villupuram
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Villupuram
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Villupuram
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Villupuram
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Villupuram
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Villupuram
நிதி எழுப்பும் கேள்வி!
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
2 mins
October 31, 2025
Dinamani Villupuram
அன்புள்ள ஆசிரியருக்கு...
நடுத்தர மக்களின் வளர்ச்சி
1 min
October 31, 2025
Translate
Change font size
