試す - 無料

வங்கிகளின் சேவைத் தரம் தொடரும்!

Dinamani Villupuram

|

June 28, 2025

வங்கிகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுவரும் எண்மப் புரட்சியில் பல பழைமை அனுபவங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. காணாமல் போனதில் முக்கியமானது, வங்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே நிலவிய தனிப்பட்ட தொடர்பு (பர்சனல் டச்) என்ற பாலமாகும்.

- கூ. லிஸி சீவக

முதாயத்தில்குறிப்பிட்ட அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு மட்டும் வங்கிசார்ந்த வசதிகள் என்ற சித்தாந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அந்த வசதிகளை அனைத்துத் தரப்பினரும் அனுபவிக்கும் வகையில் பரவலாக்கப்பட்டது, நம் பொருளாதார சரித்திரத்தில் ஓர் அரிய நிகழ்வாகும். நாட்டின் பொருளாதார முன்னேற்றம், அனைத்துத் தரப்பினரையும் சார்ந்ததாக இருத்தல் வேண்டும் என்ற காந்திய கொள்கைக்கு இந்த நிகழ்வுகள் வலுசேர்த்தன. குடிசைத் தொழில் முதல் விவசாயத் துறை வரையிலான பயனாளிகள், நாளுக்குநாள் பெருகிவருவது வங்கித் துறையின் பயன்பாடுகள், சமுதாயத்தில் பெரும்பாலான வர்களைச் சென்றடைந்ததற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

உலக பொருளாதார தளத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நம் நாட்டின் பிரதிபிம்பமாக வங்கிகளின் செயல்பாடுகள் பார்க்கப்படுகின்றன. வங்கிகளின் செயல்பாடு, இருசக்கர வாகனத்தைப் போன்றது. சேமிப்பாளர்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாக பெற்று, தேவைப்படுவோருக்கு, அந்தப் பணத்தை கடனாக வழங்கி, லாபம் ஈட்டுவதுதான் வங்கிகளின் அடிப்படைச் செயல்பாடாகும். இந்தச் செயல்பாட்டில், சக்கரங்களின் வேகசுழற்சி ஒன்றுக்கொன்று ஈடு கொடுத்து, வாகனம் தடையின்றி நகர்வதற்கு வழிவகுக்க வேண்டும். அந்த செயல்பாடுகளில், எந்தப் பக்கம் சுணக்கம் ஏற்பட்டாலும், அது வங்கித் துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

எடுத்துக்காட்டாக, கடன் தேவைகளுக்கு ஏற்றபடி, டெபாசிட் தொகை வளரவில்லை என்றால், அந்த குறையை நிறை செய்ய வங்கிகள் மற்ற நிதி அதாரங்களை அணுக வேண்டி இருக்கும். சில சமயங்களில் அவற்றுக்கான செலவினங்கள் அதிகமாக இருக்கலாம் அல்லது சில நிதிஆதாரங்களின் காலக்கெடு தேவைக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கலாம். இதனால், வங்கிகளின் லாபம் பாதிப்படைவதுடன், அவற்றின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படும்.

அண்மையில், வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசும் போது, வங்கிகளின் டெபாசிட் தொகை, முந்தைய அண்டைவிட 11.1 சதவீத அளவுக்குத்தான் வளர்ந்துள்ளது. 17.4 சதவீத கடன் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது சற்று கவலை அளிக்கும் நிலையாகத் தோன்றுகிறது' என்ற கருத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு செய்துள்ளார். அண்மைக் காலங்களில், வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகைகளை (பல்க் டெபாசிட்) அதிக வட்டிக்கு டெபாசிட்டாக பெறுகின்றன.

Dinamani Villupuram からのその他のストーリー

Dinamani Villupuram

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Villupuram

Dinamani Villupuram

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Villupuram

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Villupuram

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Villupuram

Dinamani Villupuram

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Villupuram

Dinamani Villupuram

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Villupuram

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Villupuram

Dinamani Villupuram

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Villupuram

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Villupuram

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size