Prøve GULL - Gratis
யோகா - வாழ்வியல் நெறி!
Dinamani Tiruvarur
|June 21, 2025
பாரத நாட்டிலுள்ள ஆறு தத்துவ தரிசனங்களில் ஒன்றாக யோகமானது திகழ்கிறது.
-
பண்டைக் காலத்திலிருந்தே முனிவர்களும், சித்தர்களும், தவசீலர்களும், யோகிகளும், ஞானிகளும், தன்னை உணர்ந்தோரும் மனிதகுலத்தின் மீது அளப்பரும் அன்பும் இரக்கமும் பரிவும் கொண்டு மனித வாழ்க்கையின் குறிக்கோளை மிக நுட்பமாக அறிந்து உணர்ந்து, அந்த முக்தியை அடைவதற்கு உரிய பல அரிய நெறிமுறைகளை அருளினர். மனிதன் முக்தி அடைவதற்கு உடல் நலமும் மனநலமும் இன்றியமையாதவை. மனிதன் தன் உண்மையான இயல்பை உணர்ந்து, முக்தியை அடைய உடல், மன நலத்துடன் வாழ்ந்து உண்மையான உயர்ந்த இன்பத்தை அடையும் வழிகளைத் திருமூலர் திருமந்திரத்தில் மனிதகுலத்துக்கு வழங்கியுள்ளார். திருமூலரின் திருமந்திரமானது, பன்னிரு சைவத் திருமுறைகளின் பத்தாம் திருமுறையாக அமைந்துள்ளது. திருமூலர் அறுபத்து மூன்று மெய்யடியார்களில் ஒருவர் ஆவார். இவர் அட்டமாசித்திகளில் தேர்ந்த ஞானயோகி ஆவார்.
யோகம் என்னும் சொல்லுக்கு இணைதல், சேர்தல், ஒருமுனைப்பாடு எனப் பல பொருள்கள் உள்ளன. நம் உடல், மனம், மூச்சு, அறிவு என்னும் இவ்வனைத்தும் ஒருங்கிணைந்து செயலாற்றுவதுதான் உண்மையான யோகமாகும். திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் அட்டாங்க யோகம் குறித்து விவரித்துள்ளார். யோகத்தின் எட்டு அங்கங்களான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தாரணம், தியானம், சமாதி என்னும் இவற்றைக்குறித்து ஆழமாக விளக்கியுள்ளார்.
Denne historien er fra June 21, 2025-utgaven av Dinamani Tiruvarur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Tiruvarur
நிதி எழுப்பும் கேள்வி!
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
2 mins
October 31, 2025
Dinamani Tiruvarur
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
1 mins
October 31, 2025
Dinamani Tiruvarur
அன்புள்ள ஆசிரியருக்கு...
நடுத்தர மக்களின் வளர்ச்சி
1 min
October 31, 2025
Dinamani Tiruvarur
இரட்டைப் பெருமை!
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
2 mins
October 31, 2025
Dinamani Tiruvarur
முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா: அரசு வழிமொழியத் தயார்
பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு வழிமொழி யத் தயாராக இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
October 31, 2025
Dinamani Tiruvarur
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
1 min
October 31, 2025
Dinamani Tiruvarur
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Dinamani Tiruvarur
கர்நாடக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
October 31, 2025
Dinamani Tiruvarur
அன்பின் வழியது உயிர்நிலை
நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.
2 mins
October 30, 2025
Translate
Change font size

