Prøve GULL - Gratis
விழிப்புணர்வு இல்லாத மலைக் கிராம மக்கள்: சவாலாகும் மகப்பேறு சிகிச்சை
Dinamani Tiruppur
|July 21, 2025
ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் மகப்பேறு சிகிச்சையில் சுகாதாரத்துறை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
ஈரோடு, ஜூலை 20:
பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வின்படி, தமிழகத்தில் 99.6 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் பிரசவமும் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக கிராமங்களில் இந்தக் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.
ஆனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துமனைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே பிரசவம் பார்க்கும் நிலை இப்போதும் தொடர்வதால் பிரசவ காலத்தில் தாய்-சேய் உயிரிழப்பும் நிகழ்கிறது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம் சோளகர் தொட்டி கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 25 வயதுப் பெண் இரண்டாவது பிரசவத்துக்கு கடந்த 7-ஆம் தேதி பைனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் நாள் குறித்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி முதல் அவர் குடும்பத்துடன் மாயமாகிவிட்டார். காவல் துறையினருடன் இணைந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைத் தேடி வரும் நிலையில் இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
முதல் பிரசவத்துக்கே மருத்துவமனைக்கு வருவதற்கு தயக்கம் காட்டிய அந்தப் பெண்ணை சுகாதாரத் துறை அலுவலர்கள் வற்புறுத்தி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் ஆனது. இரண்டாவது முறை கருவுற்றதில் இருந்து சுகாதாரத் துறை பணியாளர்கள் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மகப்பேறு பரிசோதனைகளுக்கு அவர் தவறாமல் வந்தார். பிரசவ நேரத்தில் அவரைக் காணவில்லை.
Denne historien er fra July 21, 2025-utgaven av Dinamani Tiruppur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruppur
Dinamani Tiruppur
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruppur
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Tiruppur
உதகை ஆளுநர் மாளிகையில் சிறுத்தை நடமாட்டம்
உதகையிலுள்ள மக்கள் (ஆளுநர்) மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Translate
Change font size
