Prøve GULL - Gratis
பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி
Dinamani Tiruppur
|March 18, 2025
எதிர்ப்பு-154; ஆதரவு-63
-
சென்னை, மார்ச் 17: தமிழக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவுவை பதவி நீக்கக் கோரும் அதிமுகவின் தீர்மானம் திங்கள்கிழமை தோல்வி அடைந்தது. பேரவையில் தீர்மானத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் 154 பேரும், ஆதரவாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக உறுப்பினர்கள் 53 பேரும் வாக்களித்தனர். அதேசமயம், பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது அவையில் இல்லை.
அதிமுக தீர்மானம்: சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்கக் கோரும் அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்தார். பேரவையில் ஒரு உறுப்பினர் முன்மொழிந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க, பேரவை விதி 70 (2)-ன்படி, 35-க்கும் குறையாத உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். அந்த அடிப்படையில், உதயகுமார் முன்மொழிந்த தீர்மானத்துக்கு ஆதரவு இருக்கிறதா என பேரவைத் தலைவர் மு.அப்பாவு கேள்வி எழுப்பினார். அதற்கு, அப்போது அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் 63 பேர் எழுந்து நின்றனர். தீர்மானத்துக்கு 35-க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால், அதிமுகவால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
இருக்கையிலிருந்து இறங்கினார்: பேரவைத் தலைவர் மீதே நம்பிக்கையில்லாத தீர்மானம் அளிக்கப்பட்டதால், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும் பொறுப்பை பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இடம் அப்பாவு ஒப்படைத்தார். இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தும் பொறுப்பை துணைத்தலைவர் பிச்சாண்டி ஏற்று அவையை நடத்தத் தொடங்கினார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்த தீர்மானத்தை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். இதையடுத்து, தீர்மானத்தின் மீது பேச எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுமதி தரும்படி ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுக்க, அதனை பேரவை துணைத்தலைவர் ஏற்றுக்கொண்டு அனுமதித்தார்.
Denne historien er fra March 18, 2025-utgaven av Dinamani Tiruppur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruppur
Dinamani Tiruppur
அன்பின் வழியது உயிர்நிலை
நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.
2 mins
October 30, 2025
Dinamani Tiruppur
அன்புள்ள ஆசிரியருக்கு...
காந்தியத்தைப் பின்பற்றுவோர் பழைமைவாதிகள் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் ('புதிய தலைமை மலர்கிறது!'-கட்டுரை-க. பழனித்துரை, 22.10.25). காந்தியம் மரணிக்கவில்லை. கோபிசெட்டிபாளையத்தில் அதற்கு விதை ஊன்றப்பட்டு துளிர்த்து வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. காந்தியவாதிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பின்பற்றினால் புதிய வெளிச்சம் கிடைத்து நவீன பாதை தென்படும். அவர்கள் அரசியலுக்கும் வந்து, தங்கள் பங்களிப்பை அளிப்பது இன்றியமையாதது. சீர்கெட்டிருக்கும் இன்றைய சமுதாயத்தின் அனைத்துக் கட்டங்களிலும் சீர்திருத்தம் தேவை. அது காந்தியத்தால் முடியும். எனவே காந்தியத்தை நவீன இந்தியாவுக்கான சூத்திரமாக பயன்படுத்தி தீர்வு காணலாம்.
1 min
October 30, 2025
Dinamani Tiruppur
டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 30, 2025
Dinamani Tiruppur
டிஎம்பி நிகர லாபம் ரூ. 318 கோடியாக உயர்வு
2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921 முதல் செயல்பட்டு வரும் தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் ரூ.318 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
October 30, 2025
Dinamani Tiruppur
புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
1 min
October 29, 2025
Dinamani Tiruppur
லாப நோக்க விற்பனையால் சரிந்த பங்குச் சந்தை
லாப நோக்க விற்பனை மற்றும் ஆசிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
October 29, 2025
Dinamani Tiruppur
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...
இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
3 mins
October 29, 2025
Dinamani Tiruppur
அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து
குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.
1 min
October 29, 2025
Dinamani Tiruppur
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு
வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Tiruppur
நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்
தமிழகம், புதுவை உள்பட 12 மாநிலங்களில் தொடக்கம்
1 mins
October 28, 2025
Translate
Change font size

