Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி

Dinamani Tiruppur

|

March 18, 2025

எதிர்ப்பு-154; ஆதரவு-63

சென்னை, மார்ச் 17: தமிழக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவுவை பதவி நீக்கக் கோரும் அதிமுகவின் தீர்மானம் திங்கள்கிழமை தோல்வி அடைந்தது. பேரவையில் தீர்மானத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் 154 பேரும், ஆதரவாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக உறுப்பினர்கள் 53 பேரும் வாக்களித்தனர். அதேசமயம், பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது அவையில் இல்லை.

அதிமுக தீர்மானம்: சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்கக் கோரும் அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்தார். பேரவையில் ஒரு உறுப்பினர் முன்மொழிந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க, பேரவை விதி 70 (2)-ன்படி, 35-க்கும் குறையாத உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். அந்த அடிப்படையில், உதயகுமார் முன்மொழிந்த தீர்மானத்துக்கு ஆதரவு இருக்கிறதா என பேரவைத் தலைவர் மு.அப்பாவு கேள்வி எழுப்பினார். அதற்கு, அப்போது அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் 63 பேர் எழுந்து நின்றனர். தீர்மானத்துக்கு 35-க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால், அதிமுகவால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

இருக்கையிலிருந்து இறங்கினார்: பேரவைத் தலைவர் மீதே நம்பிக்கையில்லாத தீர்மானம் அளிக்கப்பட்டதால், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும் பொறுப்பை பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இடம் அப்பாவு ஒப்படைத்தார். இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தும் பொறுப்பை துணைத்தலைவர் பிச்சாண்டி ஏற்று அவையை நடத்தத் தொடங்கினார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்த தீர்மானத்தை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். இதையடுத்து, தீர்மானத்தின் மீது பேச எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுமதி தரும்படி ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுக்க, அதனை பேரவை துணைத்தலைவர் ஏற்றுக்கொண்டு அனுமதித்தார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Tiruppur

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Tiruppur

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruppur

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

தெலங்கானா அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 mins

November 01, 2025

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruppur

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruppur

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruppur

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Tiruppur

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Translate

Share

-
+

Change font size