Facebook Pixel பிற உயிர்கள் காப்போம்! | Dinamani Tirunelveli - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பிற உயிர்கள் காப்போம்!

Dinamani Tirunelveli

|

March 07, 2025

எந்த மருத்துவரும், தானிய உணவுகள், காய்கறி, பழங்கள், கீரை வகைகளை விட புலால் உணவு மனிதனுக்குச் சிறந்தது என்று மனமுவந்து பரிந்துரைப்பதில்லை. முடிந்தவரை புலால் உணவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார்கள்.

- மா.கல்யாண மோகன்

இறைநிலை அல்லது இயற்கையின் படைப்பில், எல்லா உயிர்களும் சமம். இதைத்தான் வள்ளுவப் பெருமகனார், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்று கூறுகிறார். அதாவது, எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரு தன்மையானதே. ஆயினும், செய்கின்ற தொழில்களில் உயர்வு, தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை என்பது அக்குறளின் பொருள். ஆக பிறப்பால் எல்லா உயிர்களும் சமம் என்பது உறுதி.

உணவு உண்ணக்கூடிய அடிப்படையில் உலகில் உள்ள உயிர்கள் மூன்று வகைப்படும். முதலாவது, தாவர உணவுகள் அல்லது சைவ உணவுகளை மட்டுமே உண்ணக்கூடிய ‘ஹெர்பிவோர்’ எனப்படும் தாவர பட்சிணிகள், இரண்டாவது, மற்ற உயிரினங்களை உணவாக உண்ணக்கூடிய அல்லது அசைவ உணவுகளை உண்ணக்கூடிய ‘கார்னிவோர்ஸ்’ என்று சொல்லக்கூடிய மாமிச பட்சிணிகள். மூன்றாவது, தாவர உணவுகள் மற்றும் மாமிச உணவுகள் இரண்டையும் உண்ணக்கூடிய ‘ஆம்னிவோர்ஸ்’ என்று சொல்லக்கூடிய சர்வ உண்ணிகள்.

கற்கால மனிதன் ஆரம்ப காலத்தில் காடுகளிலும், குகைகளிலும், அடர்ந்த வனங்களிலும் வாழ்ந்து வந்தான். அவனுக்குப் பசி வரும்போது, தன் பசியைப் போக்கிக் கொள்ள, தன்னை விட வலிமை குறைந்த விலங்குகளை வேட்டையாடி, அவற்றின் மாமிசத்தை பச்சையாக உண்டு வந்தான். அடுத்து, கற்களை உரசி நெருப்பை உண்டாக்கத்தெரிந்தபின் வேட்டையாடிய மாமிசங்களை தீயில் பொசுக்கி, வேக வைத்து உண்டு மகிழ்ந்தான். சுட்ட மாமிசம் ருசியாக இருந்ததால், ருசியான உணவுக்கு மனிதன் அடிமையாக ஆரம்பித்தான். ஆனால், இதே காலகட்டத்தில் மரங்களிலிருந்தும், செடிகளிலிருந்தும் விளையக்கூடிய பல வகையான கனிகளையும், காய்கறிகளையும் அவை என்னவென்றே தெரியாமல் உண்டு வந்தான்.

காலப்போக்கில் விலங்குகளின் எண்ணிக்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், அதனால் ஏற்பட்ட பசியின் கொடுமையாலும், மனிதன் மாற்று உணவைத் தேடத் தொடங்கினான். அப்போது தன் ஆறாம் அறிவால் சிந்திக்கத் தொடங்கி, தானியங்களைப் பயிர் செய்யும் விவசாயத்தைக் கற்றுக்கொண்டான். இப்போது ஆறாவது அறிவின் பயன்பாட்டாலும், அதை உபயோகிக்கத்தெரிந்து கொண்ட ஆற்றலாலும் மாமிச உணவுடன் தாவர உணவையும் சேர்த்து, இரண்டையும் புசித்து வந்தான்.

FLERE HISTORIER FRA Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு

பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Tirunelveli

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே. பவானீஸ்வரி தெரிவித்தார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Tirunelveli

காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா?

உயர்நீதிமன்றம் கேள்வி

time to read

1 mins

June 11, 2026

Dinamani Tirunelveli

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

June 11, 2026

Translate

Share

-
+

Change font size