Facebook Pixel 'வந்தே மாதரம்' 150... | Dinamani Tiruchy - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

'வந்தே மாதரம்' 150...

Dinamani Tiruchy

|

November 07, 2025

இந்தியத் திருநாட்டின் வரலாற்றின் நீண்ட நெடிய ஊக்கமளிக்கும் பயணத்தில், பாடல்களும் கலைகளும் இயக்கங்களின் உணர்வாக மாறி மக்களின் உணர்வுகளை செயல்பாடாக மாற்றிய ஏராளமான தருணங்கள் இருந்துள்ளன. சத்ரபதி சிவாஜி பேரரசர் படையின் போர்ப் பாடல்களாகட்டும், சுதந்திரப் போராட்டத்தின் போது இசைக்கப்பட்ட தேசியப் பாடல்களாகட்டும், அவசரகால நிலை பிரகடனத்தின் போது இளைஞர்களின் மெல்லிசைகளாகட்டும், இந்திய சமூகத்தில் பாடல்கள் எப்போதுமே கூட்டு உணர்வையும் ஒற்றுமையையும் தூண்டுகின்றன.

- அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்

'வந்தே மாதரம்' 150...

அத்தகைய பாடல்களுள் ஒன்றுதான் இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'. இதன் வரலாறு போர்க்களத்தில் தொடங்கவில்லை. மாறாக, அறிஞர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயவின் அமைதியான அதே வேளையில் உறுதியான மனதில் உதித்தது. 1875-ஆம் ஆண்டு, ஜகதாத்ரி பூஜையின் (கார்த்திகை சுக்ல நவமி அல்லது அக்ஷய நவமி) புனித நாளில், அவர் இயற்றிய ஒரு பாடல், தேச விடுதலையின் ஒருமித்த கீதமாக மாறியது. அந்தப் புனித வரிகளில், அவர் பாரதத்தின் ஆழமான நாகரிக வேர்களிலிருந்து, அதர்வண வேதத்தின் 'மாதா பூமிஹ் புத்ரோ அஹம் பிருதிவ்யா' ('பூமி எனது தாய், நான் அவரது மகன்) பிரகடனத்திலிருந்து தேவி மகாத்மியரின் தெய்வீகத் தாயின் வழிபாடு வரை உத்வேகம் பெற்றார்.

பங்கிமின் வார்த்தைகள் பிரார்த்தனையாகவும், தீர்க்கதரிசனத்துடனும் இருந்தன. 'வந்தே மாதரம்', தேசியப் பாடல் அல்லது சுதந்திரப் போராட்டத்தின் உயிர் நாடி மட்டுமல்ல. பங்கிம் சந்திரரின் கலாசார தேசியவாதத்தின் முதல் பிரகடனமாக இருந்தது. இந்தியா என்பது புவியியல் சார்ந்த பகுதி மட்டுமல்ல என்றும், மாறாக அது புவி-கலாசார நாகரிகமாகவும், வரைபடத்தில் கோடுகளால் இணைக்கப்பட்டிருப்பதுடன், கலாசாரம், நினைவுகள், தியாகம், வீரம் மற்றும் தாய்மையைப் பகிர்ந்து கொண்டுள்ளதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இது வெறும் நிலம் அல்ல; இது ஒரு தீர்த்தம்; பக்தியாலும், கடமையாலும் தூய்மைப்படுத்தப்பட்ட புனித மண்.

மகரிஷி அரவிந்தர் கூறியவாறு, இந்தியாவின் நவீன துறவியாக விளங்கிய பங்கிம், தனது வரிகள் மூலம் நாட்டு மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார். ஆனந்த மடம் என்ற அவரது படைப்பு, புதினம் மட்டுமின்றி, தூங்கிக் கொண்டிருந்த தேசத்தை அதன் தெய்வீக வலிமையை மீண்டும் கண்டுபிடிக்கத் தூண்டிய ஒரு மந்திரமானது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஃபெமா வழக்கு

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவர் உயிரிழப்பு

நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

பிரிட்டனின் முன்னோடி முடிவு !

நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.

time to read

4 mins

June 03, 2026

Dinamani Tiruchy

குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி

நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

'பெரும்பான்மையான திரிணமூல் எம்எல்ஏக்கள் மம்தாவுடன் உள்ளனர்'

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தான் உள்ளனர்; கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேவ் சட்டோபாத்யாய தெரிவித்தார்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

மேற்கு வங்கம்: 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 177 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruchy

டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து

வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.

time to read

1 mins

June 03, 2026

Dinamani Tiruchy

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Listen

Translate

Share

-
+

Change font size