Prøve GULL - Gratis

பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!

Dinamani Tiruchy

|

October 12, 2025

காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:

- -தமிழானவன்

பனை மரத்தின் பாதுகாப்பு இப்போது எப்படி இருக்கிறது?

தமிழ்நாட்டு மாநில மரம் பனை. இதற்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக பனை மரம் வெட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசு பனை மரத்தைப் பாதுகாக்க ஓர் உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு அடிப்படையில், இனி யாரும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் பனை மரத்தை வெட்ட முடியாது. இது போன்ற உத்தரவு புதுவையிலும் பிறப்பிக்க வேண்டும். இப்போது பனைக்குப் பாதுகாப்பு வந்துவிட்டது.

பனை மரம் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தெரிகிறதே?

பனை மரம் ஏறுவோர்தான் பனை மரத்தைப் பாதுகாத்து வந்தனர். பனை ஓலைகளைக் கழித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். தமிழகத்தில் கள் இறக்க அனுமதியில்லாத நிலையில், பனை மரம் ஏறுவோர் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். பழக்கம் இருந்தால் மட்டும்தான் பனை மரம் ஏற முடியும். டாஸ்மாக் வந்து விட்டதால் இப்போது பனை மரம் இந்தப் பயன்பாட்டுக்கு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது.

எத்தனை ஆண்டாக பனை விதைகளை நட்டு வருகிறீர்கள்?

இளைஞர்கள் ஒன்று திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் நம் பாரம்பரியத்தை மீட்கும் எண்ணம் கொண்டது. அதைப் போன்றதுதான் பனையின் பாரம்பரியத்தை மீட்பதும். அதற்காகத்தான் 2015 முதல் பனை விதைகளை நட்டு வருகிறேன். கடலோரப் பகுதிகள், குளக்கரைகள், ஏரிக்கரைகள், சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 4.5 லட்சம் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இதில் சுமார் 2 லட்சம் பனைகள் பிழைத்துக் கொண்டன. இப்போது அவை ஓரடி, இரண்டு, மூன்றடி வரை வளர்ந்துள்ளன.

FLERE HISTORIER FRA Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’

குல்தீப், ஜடேஜா அபாரம்

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruchy

கோகோ கெளஃப் சாம்பியன்

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruchy

முதலிடத்தில் புணே

புது தில்லி, அக். 12: புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத் தில், புணேரி பல்டன் 'சூப்பர் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruchy

மதிப்புக்கு உரிய மதிப்பு!

ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.

time to read

3 mins

October 13, 2025

Dinamani Tiruchy

அலிசா ஹீலி அதிரடி: ஆஸ்திரேலியா வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.

time to read

2 mins

October 13, 2025

Dinamani Tiruchy

வரலாறு படைத்தார் வசெராட்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரர் வாலெண்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruchy

காலத்தில் கரைந்துவிட்ட கம்பதாசன்

தாஸ் என்றாலும் தாசன் என்றாலும் பொருள் ஒன்றுதான். இலக்கியத்தில் நாம் முதன்முதல் அறியக்கூடிய தாஸ் வடமொழியில் பல காவியங்களை எழுதிய மகாகவி காளிதாஸ். இந்தியில் இராமாயணம் எழுதிய துளசிதாஸ், கன்னடத்தில் புரந்தரதாஸ், ஹிந்தியில் கபீர்தாஸ், என்று பலர் இருந்திருக்கிறார்கள்.

time to read

3 mins

October 12, 2025

Dinamani Tiruchy

தீபாவளி ட்ரெய்லர்

வருடா வருடம், பெரிய பண்டிகைகள் அல்லது விடுமுறை நாள்களைக் குறிவைத்து வரிசையாகப் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடத் தொடக்கத்திலேயே, பெரிய நடிகர்களின் படங்கள் சில வெளியாகி விட்டன. இருப்பினும், இந்த வருடத்தில் எதிர்பார்ப்புக்குரிய சில படங்கள் வெளியாக லைனில் ரெடியாக காத்து நிற்கின்றன. வரும் தீபாவளிக்கு எந்தெந்தப் படங்கள் வெளியாகும் என்பதை இங்கு பார்ப்போம்.

time to read

2 mins

October 12, 2025

Dinamani Tiruchy

கோலிவுட் ஸ்டூடியோ!

நட்சத்திரங்களின் ரீயூனியன்!

time to read

1 min

October 12, 2025

Translate

Share

-
+

Change font size