Prøve GULL - Gratis
விண்வெளி ஆய்வில் இந்தியா!
Dinamani Tiruchy
|August 23, 2025
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கிய இடம் இனிமேல் 'சிவசக்தி முனை' என்றழைக்கப்படும்; சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று, சந்திரயான்-3 விக்ரம் தரை இறங்கு வாகனம் (லேண்டர்), பிரக்யான் நிலவு ஊர்தி (ரோவர்) ஆகியவற்றை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு, நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என இந்தியா பெயர் பெற்றது.
இந்த சாதனையை அங்கீகரித்த பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நினைவு கூரும் வகையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதியை இந்தியாவின் 'தேசிய விண்வெளி தினம்' என்று அறிவித்தார்.
இந்த நாள், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை முன்னணியில் நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கவும், அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொழில் செய்ய ஊக்குவிக்கும் ஒருதளமாகவும், விண் வெளி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத் தையும், இந்தியாவின் பெருமையை விண் ணில் நிலைநாட்டிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் இரண்டாவது தேசிய விண்வெளி தினம் 23.08.2025 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
டாக்டர் விக்ரம் சாராபாயின் தலைமையி ல், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவை 23.02.1962 அன்று அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு நிறுவியதில் இருந்து இந்தியாவின் விண் வெளிப் பயணம் தொடங்கியது. இது 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, தேசிய வளர்ச்சிக்கு விண்வெளி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நோக் கத்துடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக பெயர் மாற்றம் பெற்றது.
1963-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள தும்பாவில் இருந்து அமெரிக்காவின் நைக் அப்பாச்சி சோதனை ராக்கெட்டை ஏவி யது இஸ்ரோ. அந்த கிராமம் 'தும்பா பூமத் திய ரேகை சமச்சீர் ராக்கெட் ஏவுதளம்' என்றழைக்கப்படும் தொடக்கம் பெற்றது. பின்னர், விக்ரம் சாராபாய் நினைவாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையமாக மாற்றம் பெற்றது.
Denne historien er fra August 23, 2025-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
Dinamani Tiruchy
ராகு - கேது தோஷம் போக்கும் தலம்
அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.
1 mins
October 24, 2025
Dinamani Tiruchy
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையானது.
1 min
October 24, 2025
Dinamani Tiruchy
'ரீல்ஸ்'களுக்குப் பின்னால்...!
பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, இளைஞர்களின் அடையாளம், திறமை, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாக உள்ள சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளையே விளைவிக்கிறது. கவனம் ஈர்க்கும் உளவியல் நுட்பத்தில் இசை, உரை, வசனம், பாடல், காட்சித் தொகுப்பு கொண்டு 15-90 விநாடிகளில் உருவாக்கப்படும் 'ரீல்ஸ்' என்ற குறும்பட காணொலி பெரும்பாலானோரை பார்க்கச் செய்கிறது.
2 mins
October 24, 2025
Dinamani Tiruchy
பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம்: வட்டாட்சியர் கைது
திருச்சியில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
October 24, 2025
Dinamani Tiruchy
வியர்வை சிந்தும் வேலர்!
முருகப்பெருமானைக் காண பாதயாத்திரை மூலமாகவும் மலை ஏறியும் வியர்க்க வியர்க்க வரும் பக்தர்களை எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். ஆனால், தன் திருமேனி எங்கும் வியர்வை வழியக் காட்சி தரும் முருகனை சிக்கல் திருத்தலத்தில்தான் தரிசிக்க முடியும்.
1 mins
October 24, 2025
Dinamani Tiruchy
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.20 கோடி இழப்பு: ஊழல் ஒழிப்புத் துறை வழக்கு
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணிகளால் அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டதாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
1 mins
October 23, 2025
Dinamani Tiruchy
முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி
இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.
1 min
October 23, 2025
Dinamani Tiruchy
சென்னை, 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
October 23, 2025
Dinamani Tiruchy
அண்ணா பல்கலை. புதிய பதிவாளராக வி.குமரேசன் நியமனம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியர் வி. குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
October 23, 2025
Dinamani Tiruchy
தென்னாப்பிரிக்காவை மீட்ட முத்துசாமி, ரபாடா
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் சேர்த்து புதன்கிழமை ஆட்டமிழந்தது.
1 min
October 23, 2025
Translate
Change font size

