Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

கவலை தரும் கல்வியின் தரம்

Dinamani Tiruchy

|

August 07, 2025

கற்றல் திறனை அதிகரிக்கும் முறைகளில் சோதித்து அளவிடுதல் முறை மிகப் பழைமையானது மட்டுமல்ல; சரியானதும் ஆகும். தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற எல்லா நிலைகளிலும் முதன்மை பெற பாடத்திட்டங்களும் தேர்ச்சி முறைகளும் அமைக்கப்பட வேண்டும்.

- டி.எஸ். தியாகராசன்

அமெரிக்க ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலின் இந்திய உறுப்பு அமைப்பான திறன் சோதிப்பு நிறுவனம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய தொழிலாளர்களில் பத்து நபர்களில் ஒன்பது பேர் குறைந்த செயல் திறன் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் திறனை தரவரிசைப் பட்டியலிட்டு மிகக் குறைந்த செயலாற்றும் திறன் உடையவர்களை ஒன்று, இரண்டு என்ற தரத்தில் பிரிக்கிறது. இவர்கள் வீதியில் விற்பனை செய்வோர், வீட்டுப் பணியாளர்கள், கை கால்களைக்கொண்டு தொழில்களை இயக்குவோர் என்று வகைப்படுத்தி உள்ளனர். இந்த மாதிரியான தொழிலாளர்களை வொகேஷனல் பாடப்பிரிவுகளில் சேர்த்து பயிற்சி கொடுத்தாலும் பலன் இல்லை. பிராந்தியவாரியாக பிரித்து பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. அதேநேரத்தில், யூனியன் பிரதேசங்களான சண்டீகர், புதுவை, கோவா மற்றும் கேரளம் போன்ற மாநிலங்கள் செயல்திறன்மிக்க தொழிலாளர்களைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிர்கால தொழிலாளர் திறன் குறித்தான வரைபடத்தின் கீழ் நடத்தப்பட்ட தகவல் சேகரிப்பு அட்டவணை 2017-18 முதல் 2023-2024 வரையிலான தகவல் 8.25% பட்டதாரிகள் மட்டுமே அவரவர்களின் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களை மூன்று என்ற தரவரிசையில் சேர்க்கிறார்கள். 88 % தொழிலாளர்கள் மேற்சொன்ன ஒன்று, இரண்டு என்ற தரவரிசைப் பட்டியலின் கீழ் வருகிறார்கள்.

மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயந்த் சௌதரி 50 % பட்டதாரிகள், எழுத்தர், மெக்கானிக், இயந்திரங்களை இயக்குவோர் என்கிறார். 38.23% பட்டதாரிகள் மட்டுமே தொழில் திறன்மிக்கவர்கள் என்ற தரவரிசையான நான்கில் வருகிறார்கள். 28.12 % முதுநிலைப் பட்டதாரிகள் மத்திம தொழில் திறன் உடையவர்கள்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruchy

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Dinamani Tiruchy

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruchy

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Tiruchy

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Tiruchy

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruchy

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruchy

டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinamani Tiruchy

டிஎம்பி நிகர லாபம் ரூ. 318 கோடியாக உயர்வு

2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921 முதல் செயல்பட்டு வரும் தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் ரூ.318 கோடியாக உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinamani Tiruchy

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

time to read

2 mins

October 30, 2025

Translate

Share

-
+

Change font size