Facebook Pixel நமது மொழி - வேற்றுமையில் ஒற்றுமை! | Dinamani Tiruchy - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

நமது மொழி - வேற்றுமையில் ஒற்றுமை!

Dinamani Tiruchy

|

June 09, 2025

இந்தியாவின் மொழி ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

- கோதை ஜோதிலட்சுமி

தனது அரசுமுறைப் பயணத்தில் ஸ்பெயினில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் ஒவ்வொருவரும் மனம்கொள்ள வேண்டிய சொற்கள்.

மொழி என்பது மானுடத்தின் வரம். மனித சமூகத்தின் உயிர்நாடி. தகவல் பரிமாற்றத்துடன் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சாதனமும் ஆகும். ஒரு இனத்தின் பண்பாடு, மரபுகள், பழக்கவழக்கங்கள், வரலாறு ஆகியவற்றைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் ஊடகமாக மொழி செயல்படுகிறது. மொழியை இழப்பது இனத்தின் அடையாளத்தை இழப்பதற்குச் சமம்.

அவரவர் தாய்மொழி அவரவர்க்கு உயர்வானது. எந்த மொழியையும் கற்கலாம்; அதன் அழகை, இலக்கியங்களை ரசிக்கலாம். அதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கிறது. தனது மொழியின் பெருமைகளைப் பேசலாம். அதேநேரம் எந்த மொழியையும் விமர்சிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. தேசங்கள் தாண்டியோ அல்லது தேசத்திற்குள்ளோ உலகம் முழுமைக்கும் இது பொருந்தும்.

மொழி குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மொழியியல் அறிஞர்களின் இந்திய மொழிகள் குறித்த ஆராய்ச்சிகள் சில மொழிகளை செம்மொழி என வரையறுக்கின்றன. செம்மொழி குறித்த சிந்தனை இந்தியாவில் மட்டுமா? உலகின் மற்ற பகுதிகளிலும் இத்தகைய சிந்தனை உண்டா?

உலகில் கிரேக்கம், லத்தீன், சம்ஸ்கிருதம், சீனம், அரபி, ஹீப்ரு மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டது. அதன்பின் சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு மொழி செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். 1500 முதல் 2000 ஆண்டுகள் பழைமையானதாகவும், இலக்கிய வளம் மிக்கதாகவும், இலக்கணச் செழுமை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அந்த மொழியின் இலக்கியப் படைப்புகள் வேறு எந்த மொழியின் தழுவலாகவும் இல்லாமல் தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அப்படியான மொழியே செம்மொழி. செம்மொழி, காலந்தோறும் புதிய இலக்கியப் படைப்புகளை, சிந்தனைகளை உருவாக்குவதற்கான வளம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!

நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Tiruchy

27 கருடசேவை ... 18 நவநீத சேவை!

பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Tiruchy

போதிய தயாரிப்பு இன்றி ஓஎஸ்எம் முறையை அறிமுகப்படுத்திய சிபிஎஸ்இ: பெற்றோர் சங்கம் புகார்

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திரையில் மதிப்பிடும் முறையை (ஓஎஸ்எம்) போதிய தயாரிப்பு, பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்காமல் அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக தில்லி பெற்றோர் சங்கம் (டிபிஏ) புகார் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பிரிவுகள் நிரந்தரமல்ல...

கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Tiruchy

ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்

பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 min

June 05, 2026

Dinamani Tiruchy

திருப்பெருந்துறையில் திருமஞ்சனப் பெருவிழா!

திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகர் கட்டியதுதான் ஆவுடையார்கோவில் என்றழைக்கப்படும் திருப்பெருந்துறை ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில்.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Tiruchy

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Tiruchy

உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்

உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Tiruchy

வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஃபெமா வழக்கு

time to read

1 min

June 03, 2026

Translate

Share

-
+

Change font size