Prøve GULL - Gratis
உடன்படாவிட்டால் உடன்போக்கு!
Dinamani Thoothukudi
|August 10, 2025
காதல் அடைவது உயிரியல் இன்பம் என்று கூறினார் புரட்சிக் கவிஞர். காதல் உயிர்த்தொடர்பு உடையதாக இருக்குமாயின் அதில் ஏமாற்றம், பிரிவு, மனமுறிவு ஆகியவற்றுக்கு இடமே இல்லை. வெறும் உடற்கவர்ச்சியில் பிறப்பதன்று உண்மைக் காதல்.
காதலுக்கு இடையூறுகள் வரும். அவற்றைக் காதலர்களின் வலிமைமிக்க உள்ளம் தாங்கி நிற்கும். உறவுக்குள்ள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற பரம்பரை வழக்கம்; ஜாதி, செல்வத்தகுதி ஆகியவை காதலுக்குத் தடையாகிவிடுவதைக் காண்கிறோம். இவற்றை மீறி நிகழ்வதே காதலர் உடன்போக்கு. இந்தக் காதல் தடை மீறலாகிய உடன்போக்கைச் சங்க இலக்கியங்கள் மிக அழகாகச் சித்தரிக்கின்றன.
ஏரியில் மழைக்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் நிறைந்தது. ஏரி உடைத்துக் கொள்ளுமோ என்று கருதிய ஊரார் பல தடுப்புகளைச் சமைத்தனர்; ஆனாலும், ஒருநாள் இரவில் ஏரி உடைத்துக் கொண்டு வெள்ளமாய் நீர் வெளியேறி விட்டது. இதுவே ஓர் உருவகம். ஏரி உடைந்து வெள்ளம் வெளியேறுவதுபோல் காதலர் உடன்போக்கு மேற்கொள்கின்றனர்.
ஓர் ஆடவன், ஒரு குமரி என இருவரின் உள்ளத்தில் காதல் பூத்தது. மறைவடக்கமாக இருந்த காதல் ஊரார் சிலரின் பார்வையில் பட்டுவிட்டது. இந்தக் களவுச் செய்தி பெற்றோரை எட்டியது. 'மகளே! இனி நீ தினைக் கொல்லைக்குக் காவலுக்காகப் போக வேண்டாம்' என்று தடுத்து விட்டனர். தலைவன் இரவு காலங்களில் வந்து தலைவியைச் சந்திக்க முடியாமல் தோழியிடம் கவலை தெரிவித்தான். இச்சூழலிலேயே உடன்போக்குத் திட்டமிடப்பட்டது.
தலைவியின் உள்ளமெல்லாம் போராட்டம். எப்படித் துணிந்து போவது? பெற்று வளர்த்தவர்களையும் தோழியரையும் நிலையாகப் பிரிந்தே போவதா? பெற்ற தாயும் செவிலியும் காலை எழுந்து என்னைப் படுக்கையில் காணாது தவிப்பார்களே! என்றெல்லாம் கலங்குகின்றாள். ஒரு வழியாகத் துணிந்து கருக்கல் கரையுமுன் புறப்பட்டு விடுகிறாள். தலைவனிடம் அவளை அடைக்கலப்படுத்துகிறாள் தோழி.
Denne historien er fra August 10, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
இதற்கொரு முடிவு எப்போது?
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 82 சுங்கச் சாவடிகளில் 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
2 mins
September 01, 2025
Dinamani Thoothukudi
எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு
மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் எம்.பி. அனுமதி
தமிழகத்துக்கான மத்திய அரசின் கல்வி நிதியை விடுவிக்கக் கோரி கடந்த 3 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு
தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு
பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Thoothukudi
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size