Prøve GULL - Gratis

மீண்டும் நிதர்சனத்தை நிரூபித்த கத்தார் தாக்குதல்

Dinamani Thanjavur

|

September 12, 2025

கத்தாரில் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டிவிடலாம் என்ற இஸ்ரேலின் எண்ணம் 100 சதவீதம் ஈடேறாது என்ற நிதர்சனத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

துபை, செப். 11:

இதுவரை இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலில், தங்களது முக்கிய தலைவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று ஹமாஸ் அமைப்பு கூறுகிறது. ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை. கடந்தகால ஹமாஸ் தலைவர்கள் படுகொலைகளின்போதும் அந்த அமைப்பு மௌனமாகவே இருந்து வந்துள்ளது.

ஒருவேளை இந்தத் தாக்குதல் வெற்றி பெற்று, ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், அந்த அமைப்புக்கு அது முடிவாக இருக்காது. இரண்டு ஆண்டுகால போரைத் தாக்குப்பிடித்து, காஸாவில் இன்னும் சுமார் 20 பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கிறது ஹமாஸ்.

காஸா சிட்டியை முழுமையாக கைப்பற்றுவதற்காக இஸ்ரேல் தொடங்கியுள்ள புதிய தாக்குதல், 2023 அக்டோபர் 7 முதல் நடந்துவரும் போரில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திரும்பத் திரும்ப வாக்குறுதியளிக்கும் 'முழுமையான வெற்றியை' கொடுக்குமா என்பது சந்தேகமே. இதற்கு ஒரு காரணம், மக்களிடையே இரண்டறக் கலந்து, பிறகு மீண்டும் எழும் ஹமாஸின் திறன். ஹமாஸை தோற்கடிப்பது மட்டுமல்லாமல், அதை முழுமையாக ஒழித்து, மீண்டும் உருவாகாமல் தடுப்பது என்ற இஸ்ரேலின் இலக்கு, முடிவில்லாத போர் மற்றும் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேலின் முன்னாள் ராணுவ அதிகாரிகளே கூறுகின்றனர்.

பேரிழப்புகளைத் தாங்கிய ஹமாஸ்: இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகக் கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளில் ஒன்றில் ஹமாஸின் ஏறத்தாழ அனைத்து மூத்த தலைவர்களும், ஆயிரக்கணக்கான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். அதன் நீண்ட தூர ஏவுகணை கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. அதன் அரசுக் கட்டமைப்பு தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. ஈரான் மற்றும் அதன் பிற பிராந்திய கூட்டாளிகளும் கடும் பின்னடைவில் உள்ளன.

இத்தனைக்கு இடையிலும் ஹமாஸிடம் இன்னமும் ஆயிரக்கணக்கான படையினர் உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கணித்துள்ளது. இதில் போரின்போது ஹமாஸில் இணைந்தவர்களும் அடங்குவர்.

FLERE HISTORIER FRA Dinamani Thanjavur

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Thanjavur

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Thanjavur

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Thanjavur

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Thanjavur

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Thanjavur

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Thanjavur

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Thanjavur

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Thanjavur

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Thanjavur

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

October 31, 2025

Translate

Share

-
+

Change font size