Prøve GULL - Gratis

முற்பகல் செய்யின்...

Dinamani Thanjavur

|

March 17, 2025

வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகருக்கு சுமார் 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் விரைவு ரயில் கடந்த மார்ச் 11-இல் புறப்பட்டது.

பெரோ குன்ரி என்ற இடத்துக்கு அருகே இந்த ரயில் சென்ற தண்டவாளத்தைக் குண்டு வைத்து தகர்த்த பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பயங்கரவாத அமைப்பினர், அந்த ரயிலுக்குள் ஏறி அதைக் கடத்தினர். பயணிகளை மீட்க பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள், 21 பயணிகள் என 58 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர்களில் 214 பயணிகளைக் கொன்றுவிட்டதாக பிஎல்ஏ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் ராணுவ நிலையின் மீது தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவர் உள்பட தெஹ்ரீக் ஏ தலிபான் அமைப்பினர் 10 பேர் வியாழக்கிழமை (மார்ச் 13) கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவது புதிது அல்ல. இருப்பினும் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் 748 பேர் உயிரிழந்தனர் என்றால், இந்த எண்ணிக்கை 2024-இல் 1,081-ஆக அதிகரித்துள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Thanjavur

Dinamani Thanjavur

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

time to read

2 mins

October 10, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Thanjavur

மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Thanjavur

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது

சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Thanjavur

பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Thanjavur

சபலென்கா, கெளஃபி வெற்றி

சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்

time to read

1 mins

October 09, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'

'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Thanjavur

அனுபவத் தலைமையும் அவசியம்!

இந்திய அரசியல் சூழலில், இன்றைய இளைய தலைமுறையினர், தாங்கள் விரும்பும் முடிவுகளை விரைவாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், பாரம் பரியமான அரசியல் குருநாதர்களையும், அனுபவமிக்க மூத்த தலைவர்களையும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வரு கிறது. இது விரைவான வளர்ச்சிபோல் தோன்றினாலும், நாட்டின் எதிர்காலத் தைக் கேள்விக்குறியாக்கும் ஆபத்தான போக்காகவே அமையும்.

time to read

2 mins

October 09, 2025

Dinamani Thanjavur

பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்

முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு

time to read

2 mins

October 09, 2025

Translate

Share

-
+

Change font size