Prøve GULL - Gratis

நீட் தேர்வுக்குத் தடை தேவையா?

Dinamani Pudukkottai

|

May 31, 2025

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, பட்டியலின-பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும் பொது ஒதுக்கீட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. அப்படியிருக்க நீட் தேர்வை எதிர்ப்பதற்கு போதுமான காரணம் இல்லை.

- டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா

நுழைவுத்தேர்வு என்பது ஏதோ நேற்றோ, வந்தது அல்ல; அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் வரலாறு இருக்கிறது. இது அரசால் காலங்காலமாக நடத்தப்படும் ஒன்றுதான்.

சரியாக 54 ஆண்டுகளுக்கு முன் சென்னை சட்டக் கல்லூரியின் வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவர் சேர்க்கைக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. 1961-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அகமதாபாத் இந்திய நிர்வாக மேலாண்மை நிறுவனம், நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் கெட்டிக்கார மாணவர்களின் கனவாகவும், அமெரிக்காவுக்கு செல்லும் கடவுச் சீட்டாகவும் இருக்கிறது.

இதற்கு முன் 1858-ஆம் ஆண்டுமுதல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐ.சி.எஸ். என்ற கடுமையான போட்டித் தேர்வும், சுதந்திர இந்தியாவில் ஆட்சித் துறை, காவல் துறை, வெளியுறவுத் துறை என பல வகை வேலைக்கான நுழைவுத் தேர்வுகளும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) 75 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. அதுபோல், மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வுப் பணி ஆணையம் ஆண்டாண்டு காலமாக தேர்வுகளை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு மூலம் பல மாநிலங்களில், பல பாடத்திட்டங்களின் அடிப்படையில் தேர்வு பெற்ற மாணவர்களை, ஒரே நேர்கோட்டில் பரிசோதித்து திறமையானவர்களை மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்புதான். இதில் 15% வெளிமாநிலத்தவர்களுக்கு ஒதுக்கீடு உள்ளது.

ஏதோ நுழைவுத் தேர்வை இந்த ஆட்சி கொண்டு வந்தது; அந்த ஆட்சி தடுக்கவில்லை; ஒரே நாளில் அதை நீக்கி விடுவோம்; ஒரு கோடி கையொப்பம் வாங்கினால் நீட் மறைந்துவிடும் என்று பேசுவதெல்லாம் அற்பமான அரசியல். உண்மையில், நுழைவுத் தேர்வுகள் வெளிப்படையாக அரசியலாக்கப்படுகின்றன.

கல்வி, வெகுஜனமயம் ஆக்கப்பட்ட பிறகு, வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்துள்ள ஒரு நாட்டில் தகுதி தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக நடத்தப்படுவதல்ல; அவை வேண்டாதவர்களை அல்லது தகுதி இல்லாதவர்களை வெளியேற்றுவதற்கு நடத்தப்படுபவை.

FLERE HISTORIER FRA Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

time to read

2 mins

October 10, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Pudukkottai

மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Pudukkottai

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது

சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்

time to read

1 mins

October 09, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கண்ணீர்க் கடலில் காஸா!

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

time to read

2 mins

October 09, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'

'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Pudukkottai

பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Pudukkottai

சபலென்கா, கெளஃபி வெற்றி

சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Pudukkottai

இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.

time to read

1 min

October 09, 2025

Translate

Share

-
+

Change font size