Prøve GULL - Gratis

மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!

Dinamani Pudukkottai

|

March 21, 2025

உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.

- ஆர்.நடராஜ்

ம்பை பாந்த்ரா நகர்ப்புறத்தில் ஒரு பொது உரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த காணொலி நிகழ்வில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் நிபுணர் பிரையான் ஜான்சன் பங்கேற்றார். நிகழ்ச்சியின் நடுவில் அவர், 'சுற்றுப்புறக் காற்றில் அதிக மாசு படிந்துள்ளது; தொண்டையை எரியச் செய்கிறது; கண்களில் நீர் கசிகிறது; தோல் வறண்டு வருவதுபோல் இருக்கிறது' என்று கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; மாசுக் கட்டுப்பாடு பிரச்னையை முன் வைத்தது. மனிதனின் உயிர் பாதுகாப்புக்கும் சுகமான வாழ்க்கைக்கும் முக்கியமானவை ஆரோக்கிய உணவு, மாசில்லாத காற்று, சுத்தமான குடிநீர்.

போகி பண்டிகையின்போது பழைய பொருள்களைக் கழித்து வீட்டைச் சுத்தம் செய்து பொங்கல் தின நாளை வரவேற்கத் தயாராக வேண்டும் என்பது ஐதீகம். ஆனால், அந்த நாளில் பழைய பொருள்களுடன் பிளாஸ்டிக், வாகன டயர் எல்லாவற்றையும் கலவையாக வீட்டு வாசலில் கொளுத்தும் கொடிய பழக்கம், சீர் செய்ய முடியாத மாசைப் படரச் செய்கிறது.

சமீபத்தில் கட்டட வேலையின்போது எழும் தூசு, கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாழாக்கக் கூடாது என்ற வகையில் சென்னை மாநகராட்சி அதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுமானப் பகுதியைச் சுற்றி துணியால் மூடப்பட வேண்டும்; கழிவுகளோ துகள்களோ வெளியில் விழக்கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறுபவர்களுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது சென்னையில் பல இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்படுவதும் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதுவும் இரவு -பகலாக. இதனால், அக்கம்பக்கத்தினர் படும்பாடு சொல்லி மாளாது. விதிகள் ஏட்டளவில் மட்டும் இல்லாது, கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

FLERE HISTORIER FRA Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

time to read

2 mins

October 10, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Pudukkottai

மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Pudukkottai

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது

சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்

time to read

1 mins

October 09, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கண்ணீர்க் கடலில் காஸா!

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

time to read

2 mins

October 09, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'

'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Pudukkottai

பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Pudukkottai

சபலென்கா, கெளஃபி வெற்றி

சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Pudukkottai

இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.

time to read

1 min

October 09, 2025

Translate

Share

-
+

Change font size