Versuchen GOLD - Frei

மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!

Dinamani Pudukkottai

|

March 21, 2025

உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.

- ஆர்.நடராஜ்

ம்பை பாந்த்ரா நகர்ப்புறத்தில் ஒரு பொது உரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த காணொலி நிகழ்வில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் நிபுணர் பிரையான் ஜான்சன் பங்கேற்றார். நிகழ்ச்சியின் நடுவில் அவர், 'சுற்றுப்புறக் காற்றில் அதிக மாசு படிந்துள்ளது; தொண்டையை எரியச் செய்கிறது; கண்களில் நீர் கசிகிறது; தோல் வறண்டு வருவதுபோல் இருக்கிறது' என்று கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; மாசுக் கட்டுப்பாடு பிரச்னையை முன் வைத்தது. மனிதனின் உயிர் பாதுகாப்புக்கும் சுகமான வாழ்க்கைக்கும் முக்கியமானவை ஆரோக்கிய உணவு, மாசில்லாத காற்று, சுத்தமான குடிநீர்.

போகி பண்டிகையின்போது பழைய பொருள்களைக் கழித்து வீட்டைச் சுத்தம் செய்து பொங்கல் தின நாளை வரவேற்கத் தயாராக வேண்டும் என்பது ஐதீகம். ஆனால், அந்த நாளில் பழைய பொருள்களுடன் பிளாஸ்டிக், வாகன டயர் எல்லாவற்றையும் கலவையாக வீட்டு வாசலில் கொளுத்தும் கொடிய பழக்கம், சீர் செய்ய முடியாத மாசைப் படரச் செய்கிறது.

சமீபத்தில் கட்டட வேலையின்போது எழும் தூசு, கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாழாக்கக் கூடாது என்ற வகையில் சென்னை மாநகராட்சி அதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுமானப் பகுதியைச் சுற்றி துணியால் மூடப்பட வேண்டும்; கழிவுகளோ துகள்களோ வெளியில் விழக்கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறுபவர்களுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது சென்னையில் பல இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்படுவதும் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதுவும் இரவு -பகலாக. இதனால், அக்கம்பக்கத்தினர் படும்பாடு சொல்லி மாளாது. விதிகள் ஏட்டளவில் மட்டும் இல்லாது, கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.

time to read

2 mins

October 14, 2025

Dinamani Pudukkottai

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர்கள் தேர்வு

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் மாநில துணைச் செயலர்களாக ந.பெரியசாமி, எம். ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

முதலிடத்தில் புணே

புது தில்லி, அக். 12: புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத் தில், புணேரி பல்டன் 'சூப்பர் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Pudukkottai

மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Pudukkottai

கோகோ கெளஃப் சாம்பியன்

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’

குல்தீப், ஜடேஜா அபாரம்

time to read

1 min

October 13, 2025

Translate

Share

-
+

Change font size