Prøve GULL - Gratis
ஜாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதிக்கா?, அநீதிக்கா?
Dinamani Puducherry
|July 02, 2025
ஜாதியப் பிரிவுகள் நீரந்தரப்படுவதைத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பும் ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடும் ஊக்குவிக்கும். அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஏழைகளை ஏழைகளாக மட்டுமே வரையறை செய்யாமல், அவர்கள் பிறந்த ஜாதிகளை வைத்து இடஒதுக்கீடு செய்வது சமூக அநீதியாகுமே தவிர, சமூக நீதியாகுமா?
-
ஜாதியம் ஒரு விநோதமான கட்டமைப்பு. இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் இத்தகைய ஜாதிய கட்டமைப்பு இவ்வளவு இறுக்கமாக இல்லை. ஒருவர் தனக்கு விருப்பமான மதத்தில் சேரலாம். அதிலிருந்து விலகவும் செய்யலாம். ஆனால், அவரே தனக்கு விருப்பமான ஜாதியில் சேரவும் முடியாது. அந்த ஜாதியிலிருந்து விலகவும் முடியாது.
இந்தியாவில் ஒருவர் ஏதோ ஒரு ஜாதியில்தான் பிறக்கிறார் என்பது உண்மை. இறக்கும்போது மட்டுமல்ல, இறந்தபிறகுக் கூட அவர் ஜாதியால்தான் அடையாளம் காணப்படுகிறார். ஜாதியம் என்பது உயர்ஜாதி ஹிந்துக்களின் ரத்தத்தில் ஊறிக்கலந்துள்ளது போலவே, கீழ் ஜாதியினரை தீண்டத்தகாதவர் என்று அவர்கள் கருதுகிற மனோபாவமும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துள்ளதையும் மறுக்க இயலாது.
ஜாதிவிட்டு வேறுஜாதியில் காதலித்தால் அவர்களை அவர்களின் பெற்றோர்களே கொலை செய்துவிடுகிற அளவுக்குப் பல வழக்குகள் பல மாநிலங்களில் இன்றைக்கும் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்கள்கூட, அந்த மதத்தில் அவர்களுக்கான தனியான தேவாலயங்களில்தான் வழிபாடு நடத்துகிறார்கள்.
தமிழக நாகரிகத்தின் பொற்காலம் எனப் பேசப்படுகிற சங்ககாலத்தில்கூட கூல வாணிகன், அறுவை வாணிகன், கணியன் என்று ஜாதிகள் இருந்திருக்கின்றன. அவை உயர்வு, தாழ்வு ஜாதிகளாக இல்லை என்பதாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், அதுகுறித்த தெளிவான பதிவுகள் இல்லை. மேல்குலத்தோர், கீழ்குலத்தோர் என்று சொல்லப்படுவதால், ஏற்றத்தாழ்வுகள் இருக்கவில்லை என்று சொல்ல முடியவில்லை.
ஜாதியத்தை ஒழிக்க முடியாத நிலையில் தான் முன்னேறிய ஜாதிகள், பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், பட்டியலினப் பழங்குடி ஜாதியினர் என மூன்றாக ஜாதிகளை வகுத்துள்ளோம். முன்னேறிய ஜாதிகளிலுள்ள வசதியானவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளைத் தங்கள் சுய வசதிகளினாலேயே பெற்றுக்கொள்கிறார்கள். அதனால், பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும், பட்டியலின-தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும் இடஒதுக்கீடுகள் தரப்பட்டு, அதன்மூலம் அவர்கள் கைதூக்கிவிடப்பட்டு வருகின்றனர்.
அப்படி வந்த இடஒதுக்கீட்டின் வரலாறு தமிழ்நாட்டில் ஏறக்குறைய நூறாண்டுப் பழைமையானது.
Denne historien er fra July 02, 2025-utgaven av Dinamani Puducherry.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Puducherry
Dinamani Puducherry
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Puducherry
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Puducherry
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Puducherry
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Puducherry
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Translate
Change font size
