ஜாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதிக்கா?, அநீதிக்கா?
Dinamani Puducherry
|July 02, 2025
ஜாதியப் பிரிவுகள் நீரந்தரப்படுவதைத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பும் ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடும் ஊக்குவிக்கும். அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஏழைகளை ஏழைகளாக மட்டுமே வரையறை செய்யாமல், அவர்கள் பிறந்த ஜாதிகளை வைத்து இடஒதுக்கீடு செய்வது சமூக அநீதியாகுமே தவிர, சமூக நீதியாகுமா?
-
ஜாதியம் ஒரு விநோதமான கட்டமைப்பு. இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் இத்தகைய ஜாதிய கட்டமைப்பு இவ்வளவு இறுக்கமாக இல்லை. ஒருவர் தனக்கு விருப்பமான மதத்தில் சேரலாம். அதிலிருந்து விலகவும் செய்யலாம். ஆனால், அவரே தனக்கு விருப்பமான ஜாதியில் சேரவும் முடியாது. அந்த ஜாதியிலிருந்து விலகவும் முடியாது.
இந்தியாவில் ஒருவர் ஏதோ ஒரு ஜாதியில்தான் பிறக்கிறார் என்பது உண்மை. இறக்கும்போது மட்டுமல்ல, இறந்தபிறகுக் கூட அவர் ஜாதியால்தான் அடையாளம் காணப்படுகிறார். ஜாதியம் என்பது உயர்ஜாதி ஹிந்துக்களின் ரத்தத்தில் ஊறிக்கலந்துள்ளது போலவே, கீழ் ஜாதியினரை தீண்டத்தகாதவர் என்று அவர்கள் கருதுகிற மனோபாவமும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துள்ளதையும் மறுக்க இயலாது.
ஜாதிவிட்டு வேறுஜாதியில் காதலித்தால் அவர்களை அவர்களின் பெற்றோர்களே கொலை செய்துவிடுகிற அளவுக்குப் பல வழக்குகள் பல மாநிலங்களில் இன்றைக்கும் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்கள்கூட, அந்த மதத்தில் அவர்களுக்கான தனியான தேவாலயங்களில்தான் வழிபாடு நடத்துகிறார்கள்.
தமிழக நாகரிகத்தின் பொற்காலம் எனப் பேசப்படுகிற சங்ககாலத்தில்கூட கூல வாணிகன், அறுவை வாணிகன், கணியன் என்று ஜாதிகள் இருந்திருக்கின்றன. அவை உயர்வு, தாழ்வு ஜாதிகளாக இல்லை என்பதாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், அதுகுறித்த தெளிவான பதிவுகள் இல்லை. மேல்குலத்தோர், கீழ்குலத்தோர் என்று சொல்லப்படுவதால், ஏற்றத்தாழ்வுகள் இருக்கவில்லை என்று சொல்ல முடியவில்லை.
ஜாதியத்தை ஒழிக்க முடியாத நிலையில் தான் முன்னேறிய ஜாதிகள், பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், பட்டியலினப் பழங்குடி ஜாதியினர் என மூன்றாக ஜாதிகளை வகுத்துள்ளோம். முன்னேறிய ஜாதிகளிலுள்ள வசதியானவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளைத் தங்கள் சுய வசதிகளினாலேயே பெற்றுக்கொள்கிறார்கள். அதனால், பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும், பட்டியலின-தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும் இடஒதுக்கீடுகள் தரப்பட்டு, அதன்மூலம் அவர்கள் கைதூக்கிவிடப்பட்டு வருகின்றனர்.
அப்படி வந்த இடஒதுக்கீட்டின் வரலாறு தமிழ்நாட்டில் ஏறக்குறைய நூறாண்டுப் பழைமையானது.
このストーリーは、Dinamani Puducherry の July 02, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Puducherry からのその他のストーリー
Dinamani Puducherry
யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.
1 min
January 04, 2026
Dinamani Puducherry
ஜன.5 முதல் 9 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் ஜன.
1 min
January 04, 2026
Dinamani Puducherry
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Puducherry
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Puducherry
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Puducherry
அறநிலையத் துறையில் ரூ.124 கோடியில் புதிய பணிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
January 04, 2026
Dinamani Puducherry
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Puducherry
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Puducherry
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Puducherry
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Translate
Change font size
