Prøve GULL - Gratis

தரவுகள் பேசட்டுமே...

Dinamani Namakkal

|

July 10, 2025

கீழடி ஆய்வு முதலில் மத்திய அரசால் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழருக்கு எதிரான அணுகுமுறை என்பதில் அர்த்தமில்லை. நம்முடைய நோக்கம் நமது வரலாற்றை வெளிப்படுத்துவது மட்டுமே எனில், உலக நடைமுறைகளின் படி அறிவியல் அணுகுமுறையோடு உண்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும்.

- கோதை ஜோதிலட்சுமி

தமிழ்மொழியும் அதைப் பேசும் மக்களும் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் நம்மை வாழ்வித்து வருவதோடு உலகின் மிக மூத்த மொழிகளுள் ஒன்றென நிற்கிறது. இதனால் தான், கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்று பெருமிதம் கொள்கிறோம்.

இலக்கியங்கள் மொழியின் தொன்மையைச் சொல்கின்றன. அம்மொழி பேசும் மக்களின் நாகரிகத்தை நிறுவுவதற்கு கற்பனை கலந்த இலக்கியம் மட்டுமே சான்றாகாது. பிற சான்றுகள் தேவைப்படுகின்றன. அதற்கு அகழாய்வுகள் நடத்தப்படுகின்றன.

அகழாய்வு என்பது அறிவியல் அணுகுமுறை கொண்டது. உலகம் முழுவதும் அகழாய்வை ஒப்புக்கொள்வதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. பல வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் அறிஞர்களும், மானுடவியல் ஆராய்ச்சியாளர்களும் தொன்மையான மனித வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அகழாய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை, உலகின் முதல் நூல் என்று சொல்லப்படும் ரிக் வேதம் நம்முடையது. அது 1028 சூக்தங்களில் 10,600 ஸ்லோகங்களைக் கொண்டது. அதிலே பொற்காசுகள், பொன்னாலான ஆபரணங்கள், தங்கம் கிடைத்த இடங்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. நிர்வாகக் கட்டமைப்பை உறுதி செய்யும் அமைப்புகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வானியல் பற்றிய அறிவியல் இருக்கிறது. ரிக் வேத காலத்தை ஆராய்ந்த ஜெர்மனி அறிஞர் ஜாகோபி கி.மு. 6000 என்று முடிவுக்கு வந்தார்.

உலக நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகள், அயல்நாட்டுத் தூதுவர்கள் பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. திரைகடல் வணிகம் பற்றிய தகவல்கள், வானியல் குறிப்புகள் இருக்கின்றன. நிர்வாகம், கலைகள், ஆயுதங்கள், அணு முதல் உளவியல் வரையிலான இன்றைய உலகம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் அறிவியலைத் தொல்காப்பியம் என்ற ஒற்றை நூலே பேசிவிடுகிறது. இத்தகைய இலக்கிய வளம் நமது தொன்மையைச் சொல்ல ஏற்கெனவே இருக்கிறது.

FLERE HISTORIER FRA Dinamani Namakkal

Dinamani Namakkal

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Namakkal

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Namakkal

Dinamani Namakkal

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Namakkal

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Namakkal

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Namakkal

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Namakkal

Dinamani Namakkal

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Namakkal

அம்மானை!

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Namakkal

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Namakkal

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Translate

Share

-
+

Change font size