Prøve GULL - Gratis
யாருக்கான எதிர்காலத்தை கட்டமைக்கிறோம்?
Dinamani Karur
|July 30, 2025
நல்லவற்றைக் கற்று நாடு போற்றும் மனிதனாக தம்பிள்ளை வரவேண்டும் என்ற ஒற்றைக் கனவைத் தவிர பெற்றோருக்கு வேறெதுவுமில்லை. இத்தகைய குழந்தைகளை போதையின் பாதைக்கு இழுத்துச் செல்லும் கொடுஞ்செயலைச் செய்கிறவர்கள் பாதகர்கள்; துணைபோகிறவர்கள் படுபாதகர்கள்.
ன்றைய சமுதாயத்தில் மிகுதியான குற்றச் செயல்களுக்கு அடிப்படை காரணிகளாக பெரிதும் விளங்குபவை சமூக ஊடகங்களும் போதைப் பொருள் களின் அளவுகடந்த பயன்பாடும் என்றால் அது மிகை இல்லை. அதிலும், முக்கியமாக இந்த இரண்டு காரணிகளும் மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை இருண்டு போகச் செய்யும் சாத்தான்களாக உருமாறி வேகமெடுத்துள்ளன. சமூக ஊடகங்களில் நிகழ்கின்ற குற்றங்கள் தொழில்நுட்ப ரீதியாக நிகழ்த்தப்படுகின்றன. கண்காணிப்பதில் கூடுதல் சிரத்தை தேவைப்படுகிறது. ஆனால், போதைப் பொருள்களின் நடமாட்டம் என்பது கண்காணிக்கவும் தடுக்கவும் இயலக்கூடிய ஒன்றாகும். சான்றாக, வான் நுண்ணறிவு சுங்கத் துறை அதிகாரிகள் அண்மையில் திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ அளவுள்ள ஹைட்ரோ கஞ்சா எனப்படும் தீங்குதரும் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ.12 கோடி ஆகும். இந்திய அரசின் பத்திரிகைத் தகவல் பிரிவு அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டு இந்திய அளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.25,330 கோடி ஆகும். போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு தொடர்பான ஐ.நா. அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலக அளவில் ஏறத்தாழ 30 கோடிக்கும் அதிகமான மக்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உடல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதனால், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் என்பது சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சவாலாகவும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கு சீர்கேடாகவும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சீர்குலைவை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. பட்டிதொட்டி எங்கும் தங்குதடை இன்றி சமூக விரோதிகளால் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள போதைப் பொருள்களின் பயன்பாடு சிறியோர், பெரியோர் என்ற பாகுபாடின்றி மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, நாளைய இந்தியாவின் நம்பிக்கையாக விளங்குகிற மாணவர்களிடமும் அதிகரித்துவரும் ஆபத்தான சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்பது மிகவும் கவலை தருகின்ற ஒன்றாகும். முக்கியமாக, உயிருக்குப் பெரிதும் ஆபத்தாக விளங்குகிற வேதிப்பொருள்களால் உருவாக்கப்படுகிற செயற்கை போதைப் பொருள்களின் நுகர்வு அண்மைக்காலங்களில் அதிகரித்து இதன் விளைவாக இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, போதைப் பொருள
Denne historien er fra July 30, 2025-utgaven av Dinamani Karur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Karur
Dinamani Karur
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Dinamani Karur
வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.
1 min
January 09, 2026
Dinamani Karur
தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார்.
1 min
January 09, 2026
Dinamani Karur
பந்தன் வங்கி கடனளிப்பு 10% உயர்வு
தனியார் துறை வங்கியான பந்தன் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Karur
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Karur
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Karur
டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு
வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Karur
வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
2 mins
January 09, 2026
Dinamani Karur
ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Karur
தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.
1 min
January 09, 2026
Translate
Change font size
