Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

உயிர்களிடத்தில் அன்பு வேணும்...

Dinamani Erode & Ooty

|

June 19, 2025

எல்லா உயிரையும் தன்னுயிராகப் போற்றும் பெரும் பண்பைக் கற்றுத் தருகிறது தமிழ் மரபு. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலையே' நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாக்கினார் வள்ளுவர் பெருமான். 'பல்லுயிர் கொல்லுதல் அன்று' என்பதை நாம் உணர்ந்து கொண்டால் மானுடம் சிறக்கும்.

- முனைவர் அருணன் கபிலன்

உலகம் பரந்துபட்டது. அதில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது. நாம் கண்ணுக்குத் தெரிகிற உயிரினங்களை மட்டுமே நம்முடன் வாழ்வதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். நம்முடன் எத்தனையோ கோடிக்கணக்கான உயிரினங்கள் கண்ணுக்குத் தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மண்ணுக்கு வெளியிலும் மண்ணுக்கு உள்ளும் காற்றிலும் அவை கலந்து நிறைந்திருக்கின்றன.

மனிதர்களாகிய நாம் நமக்கிருக்கிற ஏகபோக உரிமையின் காரணமாக உரிமையாளர்கள்போல் இவ்வுலகத்தை நம் வசப்படுத்திக் கொண்டோம். ஆனால், பல உயிர்களின் துணையின்றி நாம் இந்த உலகத்தில் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து விட முடியாது. இதை நாம் அறிவினாலும் அறிய மறுக்கிறோம்; உணர்வினாலும் தெளிய மறுக்கிறோம்.

இந்த உலகத்தின் பெரும்பிரிவுகளாகத் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் ஆகிய உயிரினங்கள் விளங்குகின்றன. மனிதர்களாகிய நாம் உடலால் விலங்காகவும் அறிவினால் அதனினும் மேம்பட்ட உயிராகவும் திகழ்கிறோம். என்றாலும், ஏனைய அனைத்து உயிர்களோடும் இயைந்து வாழத்தான் முதலில் பழகிக் கொண்டோம்.

இன்னும் சரியாகச் சொல்வதானால், நம் வாழ்க்கை முறைகளையும் அறிவியல் நுட்பங்களையும் மற்ற உயிர்களிடமிருந்துதான் பெற்றுக் கொண்டோம். பறவைகளிடமிருந்து கூடுகட்டி வாழும் முறையில் தொடங்கி, அது பறப்பது போலவே நாமும் பறப்பதற்கு விமானம் தயாரிப்பது வரையிலும் பலவற்றைக் கற்றுக் கொண்டோம். இவையெல்லாம் புறக்கல்வி என்றால், அகக் கல்வியையும் இந்த உயிரினங்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளன.

இல்லறத்தையும் அதைப் பேணுகிற பெண்மையையும் எப்படிப் போற்றிக் காக்க வேண்டும் என்பதை இந்த உயிரினங்கள்தான் கற்றுத் தருகின்றன. இதைக் கலித்தொகையில் பெருங்கடுங்கோ உணர்த்திக்காட்டியிருக்கிறார்.

இல்லறத்தின் பெரும்பயனைத் துய்ப்பதற்குப் பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பாலைநிலத்து வழியில் பிரிந்து சென்றதை எண்ணித் தலைவி கலக்கம் அடைகிறாள். 'அந்தப் பாலை நிலம் கொடுமையானதாக இருக்குமே. தலைவனுக்கு ஊறு நேருமே, அது தனக்கும் துன்பமாக முடியுமே' என்று வருந்திய தலைவி, தோழியிடம் ஆறுதல் கூறித் தேற்றுகிறாள்.

FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பிகார் தோல்வி: கூடுதல் அழுத்தத்தில் காங்கிரஸ் மேலிடம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கொண்ட மோசமான தோல்வியிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் மீளாத நிலையில், அடுத்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் சில மாநிலங்களில் கடுமையான போட்டியைச் சந்திக்கும் கட்டாயத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

time to read

2 mins

November 22, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

2 நாள் உயர்வுக்குப் பின் பங்குச் சந்தை சரிவு

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வரும் டிசம்பரில் வட்டியைக் குறைக்கும் என்ற நம்பிக்கை மங்கியது மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டு நாள் உயர்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

ஜம்மு-காஷ்மீர் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் 'லாக்கர்கள்' சோதனை

பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறை நடவடிக்கை

time to read

1 mins

November 22, 2025

Dinamani Erode & Ooty

ஆபரேஷன் 'சைஹாக்': தில்லியில் சைபர் மோசடியில் ஈடுபட்ட 877 பேர் கைது

ஆபரேஷன் 'சைஹாக்' நடவடிக்கையின் கீழ் இணையவழி சைபர் மோசடிகளுக்கு எதிரான 48 மணி நேர நடவடிக்கையின் போது 4,400-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டு 877 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நீர்ம மருந்துகள் (சிரப்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்பும் உலக சுகாதார மையம் உலக நாடுகள் தங்களிடம் இந்த மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.

time to read

2 mins

November 22, 2025

Dinamani Erode & Ooty

துபையில் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானி உயிரிழப்பு

துபை விமானக் கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை திடீரென விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய ஹிமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமான்ஷ் சயால் (37) உயிரிழந்தார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

4 தொழிலாளர் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

புது தில்லி, நவ. 21: நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை (நவ. 21) அறிவித்தது.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 13 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வெள்ளிக்கிழமை (நவ.21) ஓய்வு பெற்றார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Erode & Ooty

3-ஆவது பதக்கம் வென்றார் மஹித் சந்து

ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் மஹித் சந்து தனது 3ஆவது பதக்கத்தை வியாழக்கிழமை வென்றார்.

time to read

1 min

November 21, 2025

Translate

Share

-
+

Change font size