Prøve GULL - Gratis
வணிகம் சரி...சமூக நலன்...
Dinamani Dindigul & Theni
|September 08, 2025
நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. நிறைய வருமானம் ஈட்டக்கூடிய மனித இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் எந்தச் சட்டத்துக்குள்ளும் அடங்க மறுக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, வெளியே வந்தபோது என் உடல் முழுவதும் ரத்தத் திவலைகள், தெறித்திருப்பதைப்போல் உணர்ந்தேன். காசு கொடுத்து உயிர் வதையையும், ரத்தத்தையும், வன்முறையையும் பார்த்துவிட்டு வந்தது குறித்து வேதனையாக இருந்தது.
ஒரு திரைப்படத்துக்குப் போகிறோம் என்றால் 3 மணி நேரம் நம் கவலையையும், கழுத்தை நெரிக்கும் வேலைகளையும் மறந்து, மனதை லேசாக்கிக் கொள்ளத்தானே தவிர, ஈவு இரக்கம் இல்லாமல் தலையைச் சீவுவதையும், சுட்டுத் தள்ளுவதையும் பார்க்கவா? தற்போது வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றன.
இரண்டரை மணிநேரம், கொலைகளைப் பார்க்கும் இளைஞர்களுக்கு ரத்தமும், வன்முறையும் பிடித்துப்போகிறது. தன் அபிமான கதாநாயகன் கொலை செய்வதை ஆரவாரத்துடன் அங்கீகரிக்கிறார்கள். இதன் காரணமாக நடுத் தெருவில் ஒருவரை வெட்டுவதும், ஓட ஓட விரட்டிக்கொள்வதும், பள்ளிகளில் கொலை நடப்பதும் சாதாரண நிகழ்வுகளாகி வருகின்றன.
உலகத்தில் நடப்பதைத் தானே காட்டுகிறோம் என்பார்கள் இயக்குநர்கள். நடப்பதையெல்லாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சமூகத்தில் இவை ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும். நாயகர்கள் வன்முறையைத் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வாகப் பயன்படுத்துவதைப் பார்த்து இளைஞர்கள் இதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறார்கள். அதிகப்படியான வன்முறை காட்சிகள் மக்கள் மனதில் சுரக்கும் ஈரத்தை வற்றிப் போக வைக்கிறது.
சமூகப் பண்பாடுகள் மற்றும் விழுமியங்கள் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு படைப்பாளியும் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டியது முக்கியம். சினிமா வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல; அது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வலிமையான கருவி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அக்காலத் திரைப்படங்கள் சமூக சீர்திருத்தக் கருத்துகளையும், நாட்டுப்பற்றையும், குடும்ப உறவுகள் மற்றும் காதலையும் கருவாகக்கொண்டிருந்தன. கொலை நடக்கும்; ஆனால், கொத்துக் கொத்தாக அல்ல; சுத்தியலைக் கொண்டு ஒருவரின் மண்டையை உடைப்பதை அப்படியே காட்ட மாட்டார்கள். இப்போதோ திரையரங்கம் முழுக்க ரத்த வாடை வீசுவதுபோல் உள்ளது. நம் சமூக ஊடகங்கள் இந்தத் தலைமுறைக்கு வன்முறையையும், ஆபாசத்தையும் கற்றுக் கொடுக்கின்றன.
Denne historien er fra September 08, 2025-utgaven av Dinamani Dindigul & Theni.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
சிறப்பு விசாரணைக் குழு ஏன்?
கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
1 mins
October 11, 2025

Dinamani Dindigul & Theni
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 mins
October 11, 2025

Dinamani Dindigul & Theni
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
October 11, 2025
Dinamani Dindigul & Theni
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Dindigul & Theni
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Dindigul & Theni
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinamani Dindigul & Theni
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Dindigul & Theni
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Dindigul & Theni
யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
நிகழாண்டுக்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
1 min
October 09, 2025
Translate
Change font size