Prøve GULL - Gratis
'வந்தே மாதரம்' 150...
Dinamani Cuddalore
|November 07, 2025
இந்தியத் திருநாட்டின் வரலாற்றின் நீண்ட நெடிய ஊக்கமளிக்கும் பயணத்தில், பாடல்களும் கலைகளும் இயக்கங்களின் உணர்வாக மாறி மக்களின் உணர்வுகளை செயல்பாடாக மாற்றிய ஏராளமான தருணங்கள் இருந்துள்ளன. சத்ரபதி சிவாஜி பேரரசர் படையின் போர்ப் பாடல்களாகட்டும், சுதந்திரப் போராட்டத்தின் போது இசைக்கப்பட்ட தேசியப் பாடல்களாகட்டும், அவசரகால நிலை பிரகடனத்தின் போது இளைஞர்களின் மெல்லிசைகளாகட்டும், இந்திய சமூகத்தில் பாடல்கள் எப்போதுமே கூட்டு உணர்வையும் ஒற்றுமையையும் தூண்டுகின்றன.
அத்தகைய பாடல்களுள் ஒன்றுதான் இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'. இதன் வரலாறு போர்க்களத்தில் தொடங்கவில்லை. மாறாக, அறிஞர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயவின் அமைதியான அதே வேளையில் உறுதியான மனதில் உதித்தது. 1875-ஆம் ஆண்டு, ஜகதாத்ரி பூஜையின் (கார்த்திகை சுக்ல நவமி அல்லது அக்ஷய நவமி) புனித நாளில், அவர் இயற்றிய ஒரு பாடல், தேச விடுதலையின் ஒருமித்த கீதமாக மாறியது. அந்தப் புனித வரிகளில், அவர் பாரதத்தின் ஆழமான நாகரிக வேர்களிலிருந்து, அதர்வண வேதத்தின் 'மாதா பூமிஹ் புத்ரோ அஹம் பிருதிவ்யா' ('பூமி எனது தாய், நான் அவரது மகன்) பிரகடனத்திலிருந்து தேவி மகாத்மியரின் தெய்வீகத் தாயின் வழிபாடு வரை உத்வேகம் பெற்றார்.
பங்கிமின் வார்த்தைகள் பிரார்த்தனையாகவும், தீர்க்கதரிசனத்துடனும் இருந்தன. 'வந்தே மாதரம்', தேசியப் பாடல் அல்லது சுதந்திரப் போராட்டத்தின் உயிர் நாடி மட்டுமல்ல. பங்கிம் சந்திரரின் கலாசார தேசியவாதத்தின் முதல் பிரகடனமாக இருந்தது. இந்தியா என்பது புவியியல் சார்ந்த பகுதி மட்டுமல்ல என்றும், மாறாக அது புவி-கலாசார நாகரிகமாகவும், வரைபடத்தில் கோடுகளால் இணைக்கப்பட்டிருப்பதுடன், கலாசாரம், நினைவுகள், தியாகம், வீரம் மற்றும் தாய்மையைப் பகிர்ந்து கொண்டுள்ளதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இது வெறும் நிலம் அல்ல; இது ஒரு தீர்த்தம்; பக்தியாலும், கடமையாலும் தூய்மைப்படுத்தப்பட்ட புனித மண்.
மகரிஷி அரவிந்தர் கூறியவாறு, இந்தியாவின் நவீன துறவியாக விளங்கிய பங்கிம், தனது வரிகள் மூலம் நாட்டு மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார். ஆனந்த மடம் என்ற அவரது படைப்பு, புதினம் மட்டுமின்றி, தூங்கிக் கொண்டிருந்த தேசத்தை அதன் தெய்வீக வலிமையை மீண்டும் கண்டுபிடிக்கத் தூண்டிய ஒரு மந்திரமானது.
Denne historien er fra November 07, 2025-utgaven av Dinamani Cuddalore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Cuddalore
Dinamani Cuddalore
கட்டு - இயக்கு - சுரண்டு!
மத்திய நெடுஞ்சாலைத் துறை 2008-இல் இயற்றிய சட்டத்தின் படி ஒரு சுங்கச்சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையிலான இடைவெளி குறைந்தபட்சம் 60 கி.மீட்டர் இருக்க வேண்டும்.
2 mins
June 01, 2026
Dinamani Cuddalore
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு
பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் மிகை லாபத் தடுப்பு வரியை மத்திய அரசு குறைத்தது.
1 min
June 01, 2026
Dinamani Cuddalore
உடல் நலத்தின் அடித்தளம்!
வேளாண் வருவாயில், கால்நடை வளர்ப்பு ஓர் அங்கமாக உள்ளது. வேலைவாய்ப்பு, உரம், உழவுத் தொழிலுக்கான உதவி ஆகியவற்றை இது வழங்குகிறது.
2 mins
June 01, 2026
Dinamani Cuddalore
அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: 4 பேர் கைது
திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை மேற்கு வங்க காவல் துறை கைது செய்தது.
1 mins
June 01, 2026
Dinamani Cuddalore
பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்
நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
1 min
June 01, 2026
Dinamani Cuddalore
என்சிபிஎச்-பதிப்புப் பல்கலைக்கழகம்
தமிழ் மண்ணில் புத்தக வாசிப்பை மக்கள் மயப்படுத்தும் பணியில் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951-ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.
3 mins
June 01, 2026
Dinamani Cuddalore
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Cuddalore
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Cuddalore
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Cuddalore
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Listen
Translate
Change font size
