Facebook Pixel 'வந்தே மாதரம்' 150... | Dinamani Cuddalore - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

'வந்தே மாதரம்' 150...

Dinamani Cuddalore

|

November 07, 2025

இந்தியத் திருநாட்டின் வரலாற்றின் நீண்ட நெடிய ஊக்கமளிக்கும் பயணத்தில், பாடல்களும் கலைகளும் இயக்கங்களின் உணர்வாக மாறி மக்களின் உணர்வுகளை செயல்பாடாக மாற்றிய ஏராளமான தருணங்கள் இருந்துள்ளன. சத்ரபதி சிவாஜி பேரரசர் படையின் போர்ப் பாடல்களாகட்டும், சுதந்திரப் போராட்டத்தின் போது இசைக்கப்பட்ட தேசியப் பாடல்களாகட்டும், அவசரகால நிலை பிரகடனத்தின் போது இளைஞர்களின் மெல்லிசைகளாகட்டும், இந்திய சமூகத்தில் பாடல்கள் எப்போதுமே கூட்டு உணர்வையும் ஒற்றுமையையும் தூண்டுகின்றன.

- அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்

'வந்தே மாதரம்' 150...

அத்தகைய பாடல்களுள் ஒன்றுதான் இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'. இதன் வரலாறு போர்க்களத்தில் தொடங்கவில்லை. மாறாக, அறிஞர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயவின் அமைதியான அதே வேளையில் உறுதியான மனதில் உதித்தது. 1875-ஆம் ஆண்டு, ஜகதாத்ரி பூஜையின் (கார்த்திகை சுக்ல நவமி அல்லது அக்ஷய நவமி) புனித நாளில், அவர் இயற்றிய ஒரு பாடல், தேச விடுதலையின் ஒருமித்த கீதமாக மாறியது. அந்தப் புனித வரிகளில், அவர் பாரதத்தின் ஆழமான நாகரிக வேர்களிலிருந்து, அதர்வண வேதத்தின் 'மாதா பூமிஹ் புத்ரோ அஹம் பிருதிவ்யா' ('பூமி எனது தாய், நான் அவரது மகன்) பிரகடனத்திலிருந்து தேவி மகாத்மியரின் தெய்வீகத் தாயின் வழிபாடு வரை உத்வேகம் பெற்றார்.

பங்கிமின் வார்த்தைகள் பிரார்த்தனையாகவும், தீர்க்கதரிசனத்துடனும் இருந்தன. 'வந்தே மாதரம்', தேசியப் பாடல் அல்லது சுதந்திரப் போராட்டத்தின் உயிர் நாடி மட்டுமல்ல. பங்கிம் சந்திரரின் கலாசார தேசியவாதத்தின் முதல் பிரகடனமாக இருந்தது. இந்தியா என்பது புவியியல் சார்ந்த பகுதி மட்டுமல்ல என்றும், மாறாக அது புவி-கலாசார நாகரிகமாகவும், வரைபடத்தில் கோடுகளால் இணைக்கப்பட்டிருப்பதுடன், கலாசாரம், நினைவுகள், தியாகம், வீரம் மற்றும் தாய்மையைப் பகிர்ந்து கொண்டுள்ளதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இது வெறும் நிலம் அல்ல; இது ஒரு தீர்த்தம்; பக்தியாலும், கடமையாலும் தூய்மைப்படுத்தப்பட்ட புனித மண்.

மகரிஷி அரவிந்தர் கூறியவாறு, இந்தியாவின் நவீன துறவியாக விளங்கிய பங்கிம், தனது வரிகள் மூலம் நாட்டு மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார். ஆனந்த மடம் என்ற அவரது படைப்பு, புதினம் மட்டுமின்றி, தூங்கிக் கொண்டிருந்த தேசத்தை அதன் தெய்வீக வலிமையை மீண்டும் கண்டுபிடிக்கத் தூண்டிய ஒரு மந்திரமானது.

Dinamani Cuddalore からのその他のストーリー

Dinamani Cuddalore

தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

time to read

1 min

May 30, 2026

Dinamani Cuddalore

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க செயலர்

வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி நடராஜும் இணைந்தனர்

time to read

1 mins

May 29, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Cuddalore

3 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 குறைவு

சென்னையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,16,000-க்கு விற்பனையானது. கடந்த 3 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,240 குறைந்துள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Cuddalore

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Cuddalore

திமுக-விசிக மோதல் சம்பவம்: 120 பேர் மீது வழக்கு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில் திமுகவினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக, இரு கட்சிகளையும் சேர்ந்த 120 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

time to read

1 min

May 28, 2026

Listen

Translate

Share

-
+

Change font size