Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

Dinamani Chennai

|

November 03, 2025

தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.

- அருணன் கபிலன்

உரல், உலக்கை, திருகை, ஆட்டுக்கல், அம்மி, அச்சாணி போன்றவை அருங்காட்சியகத்தில் மட்டுமே இன்றைக்குக் காணக் கூடியனவாக உள்ளன. இன்னும் அறியப்படாத பல பொருள்கள் இலக்கியங்களிலே சுட்டப்பட்டிருக்கின்றன. அவை பொருளாக மட்டுமின்றி சமுதாயத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றன; அவற்றுள் ஒன்றுதான் கோல் என்னும் கருவி.

கோல் என்பதற்கு மரத்தாலான கழி என்பதுதான் இயல்பான பொருள். அடிப்படையில் அவை அளவினைச் சுட்டுகின்ற அளவுகோலாகத்தான் அறியப்பட்டன. அதைத்தான் நாம் இன்றைய காலத்தில் 'ஸ்கேல்' என்கிறோம். அடிக்கோல் மாறி 'அடிஸ்கேல்' ஆகிப்போனது.

கோலில் பல வகைகள் உண்டு. ஊன்றுகோல், அளவைக்கோல், துலாக்கோல், தீக்கடைக்கோல் என்னும் ஞெலிகோல், தலைக்கோல், எழுதுகோல், அரசர்கள் கரத்திலிருக்கும் செங்கோல் வரையிலும் அவை நீள்கின்றன.

இலக்கியங்களிலும் பல இடங்களில் கோல் குறித்துச் சுட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, ஔவையார் தான் குறிப்பிடுகிற 'வரப்புயர' என்னும் பாடலில் ‘குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்' என்கிறார். திருவள்ளுவரும் சில குறள்களில் வெவ்வேறு பொருளில் கோலினைக் குறிக்கிறார். அவற்றுள் 'சமன்செய்து சீர்தூக்கும் கோல்' என்னும் அது எந்தக் கோலாக இருக்கும்?

ஏனென்றால் இத்தனை கோல்களும் சமுதாய வளர்ச்சியை அடையாளம் காட்டுகிற சான்றுகோல்களாக விளங்குகின்றன.

கடவுள் தொடங்கி அருளாளர்கள் வரையிலும் இந்தக் கோலைப் பற்றியிருக்கிறார்கள் என்பதை இலக்கியங்களில் அறிய முடிகிறது.

தன் செங்கரங்களால் வடித்த வேலினை எடுத்துப் பகையரசரைத் துரத்தும் பணியைச் செய்யும் கோமானான கோபாலன், கோலினை எடுத்துப் பசுக்களை (புல்லாங்குழலாகிய கோலெடுத்து ஆன்மாக்களையும்) வசப்படுத்துவதிலும் வல்லவனாக விளங்குகிறான் என்று ஒரு பாடலும் உண்டு.

முருகனின் கையில் பொதுவாக வேல் தான் இருக்கும். அதனாலேயே வேலாயுதன் என்ற பெயரும் பெற்றவன். ஆனால் பழங்கால சித்தர் மரபுகளிலும், தண்டம் என்னும் கோல் கைக்கொண்ட முருகன் வடிவம் உண்டு. முருகன் துறவுபூண்டு எல்லா அணிகலன்களையும் நீக்கிக் கோலை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டான். இந்தக் கோல் அவனுடைய தவப் பெருமையையும் ஒடுக்கத்தையும் குறிக்கிறது.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா

பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!

ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறவும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

time to read

2 mins

December 03, 2025

Dinamani Chennai

பபாசி தலைவர்- ஆர்.எஸ்.சண்முகம் புதிய நிர்வாகிகள் தேர்வு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கான (பபாசி) புதிய தலைவராக ஆர்.எஸ். சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

இந்திய மருத்துவம், யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்

புதிய விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம்

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

இரு நாள்களில் 14 துணை மின் நிலையங்கள், 26 மின்மாற்றிகள் பாதிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஸ்குவாஷ்: காலிறுதிச்சுற்றில் வேலவன், அனாஹத்

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி பொறுப்பேற்பு

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக, மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி பொறுப்பேற்றார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

அச்சகப் பணியாளர்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகள் திறப்பு

சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.

time to read

1 min

December 03, 2025

Listen

Translate

Share

-
+

Change font size