Prøve GULL - Gratis
இதழியலின் அஞ்சா நெஞ்சர்!
Dinamani Chennai
|April 18, 2025
இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977).
-
பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.
அழுத்தங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், உண்மையை ஒலிக்க யாருக்கும் அஞ்சாத சிலரின் குரல்களை அடக்க முடியாது. அந்த மிடுக்கான மனிதர்களில் முக்கியமானவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழுமத்தின் நிறுவனர்-தலைவரான ராம்நாத் கோயங்கா.
ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக தனது அனைத்துப் பத்திரிகைகளையும் காலவரையின்றி மூடி சுதந்திரப் போரில் பங்கெடுத்த ராம்நாத் கோயங்கா, அவசரநிலையின்போது அதிகார மையம் கட்டவிழ்த்த சவால்களை மீறி தன்னுடைய பத்திரிகைகளைத் தொடர்ந்து நடத்தி கருத்துரிமையை நிலைநிறுத்தி பத்திரிகைச் சுதந்திரத்தின் காவலராகத் திகழ்ந்தார்.
அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணம், தற்போதைய பிகார் மாநிலத்தின் வட பகுதியான தர்பங்காவில் 1904-இல் பிறந்த ராம்நாத் கோயங்கா, வணிகம் செய்வதற்காக சென்னைக்கு வந்தார். ராம்நாத் கோயங்காவுக்கு சென்னை வெறும் வியாபார இடமாக மட்டுமல்லாமல் சமுதாயம், அரசியல் புரிதலுக்கான ஒரு வளமான மேடையாகவும் மாறியது.
நகரின் மேல்தட்டு மக்களிலிருந்து எளியோர் வரை அனைவரிடமும் கலந்து பழகி, சமுதாயத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் மக்களின் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார்.
22 வயது இளைஞராக ராம்நாத் கோயங்காவின் சமுதாயநல ஆவலை உற்றுநோக்கிய சென்னை நிர்வாகம், 1926-இல் தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினராக அவரை நியமித்தது. அரசின் நியமனப் பதவியாக இருந்தாலும், மக்களின் நலனுக்காக அதை முழுமையாகப் பயன்படுத்தி, அரசின் தவறுகளையும் குறைகளையும் உரைக்கத் தயங்காத அவரது நேர்மை பலரை வெகுவாகக் கவர்ந்தது.
சுதந்திர வேட்கை வேரூன்றியிருந்த அவர், தேசபற்றுக் கொண்ட பத்திரிகைகள் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்வராஜ்யா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்தார். அந்த வகையில்தான், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார் ராம்நாத் கோயங்கா.
Denne historien er fra April 18, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Translate
Change font size

