Prøve GULL - Gratis

தமிழகத்தில் தொடங்கும் எஸ்ஐஆர்

Dinakaran Trichy

|

September 28, 2025

சொந்த மாநிலங்களை விட கல்வி, மருத்துவம், சுகாதாரம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவதால் தங்கள் குழந்தைகளை வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வளர்க்கவே அதிகம் விரும்புகிறார்கள். இங்குள்ள பள்ளிகளிலேயே படிக்க வைக்கிறார்கள். அப்படியிருக்கையில் வாக்குரிமையையும் தமிழ்நாட்டிலேயே பெறுவதே அவர்களின் முதல் விருப்பமாக இருக்கும்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி பீகார் மாநில வாக்காளர்கள் மட்டும் சுமார் 6.5 லட்சம் பேர் தமிழக வாக்காளர்களாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பீகாரில் இருந்த நீக்கப்பட்ட இவர்கள், தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிழைப்புக்காக ஒரு மாநிலத்துக்கு வந்தவர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் அந்த மாநிலத்தின் அரசியலையே மாற்றிவிடும். உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வடமாநிலத்தில் போட்டியிடுவதில்லை.

வடமாநிலத்தில் இருந்து வரும் மக்கள் பாஜ, காங்கிரசுக்கு வாக்களிக்க விரும்புவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் திராவிட அரசியல் வலிமையாக உள்ள நிலையில், இந்த அரசின் திட்டங்களை வடமாநில மக்கள் அனுபவித்துவிட்டு, பாஜவினருக்கு ஓட்டு போட வாய்ப்பளிக்கக் கூடும். ஏற்கனவே, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாமல் தவிக்கும் பாஜ, வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்து குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கியை வாங்கி உள்ளனர்.

தற்போது இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வடமாநில வாக்காளர்களை தமிழ்நாட்டில் சேர்த்து ஒட்டு வங்கியை அதிகரிக்க தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தேர்தல் ஆணைய உதவியுடன் பாஜ வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆதாரத்துடன் குற்றம்சாட்டி உள்ளார். இந்த சூழ்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களிலும் பீகாரில் நடத்தியதுபோல சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் எவ்வளவு வடமாநில வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்று தமிழ்நாட்டிலும் தேர்தல் தில்லுமுல்லு நடைபெறுமா என்று கேள்வி எழுந்து உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

FLERE HISTORIER FRA Dinakaran Trichy

Dinakaran Trichy

Dinakaran Trichy

ஐ.சி.யூ.வில்., அனுமதிக்கப்படவே இல்லை மருத்துவமனையில் ராமதாசை பார்க்காமல் சென்றவர் அன்புமணி

பாமகவை தொலைத்துவிட்டு, தொலைத்து விடுவேன் என கூறுகிறார் பதற்றத்தை உருவாக்குகிறார் அருள் எம்எல்ஏ சரமாரி குற்றச்சாட்டு

time to read

1 mins

October 13, 2025

Dinakaran Trichy

Dinakaran Trichy

வீடியோ கேம் ஆடினாலும் ரூ. 1 லட்சம் பரிசு இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளை ஊக்குவிக்க ரூ.4.54 கோடி ஒதுக்கீடு

சென்னையில் இந்தியாவின் பிரம்மாண்ட இ-ஸ்போர்ட்ஸ் திருவிழா விரைவில் நடைபெறவுள்ளது.

time to read

1 min

October 13, 2025

Dinakaran Trichy

அமெரிக்கா 100% வரி விதித்தால் கடும் நடவடிக்கை: சீனா எச்சரிக்கை

அரிய வகை தாதுக்கள், லிதியம் பேட்டரிகளை கொண்டு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா மீதான இறக்குமதி வரி கூடுதலாக 100 சதவீதம் விதிக்கப்படும். இது வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

time to read

1 min

October 13, 2025

Dinakaran Trichy

தேர்தல் நெருங்குகிறது...அறிவிப்பு வரும்... ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்

அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு மாதர் சங்கத்தினர் கடும் கண்டனம் போராட்டம் அறிவிப்பு

time to read

1 min

October 13, 2025

Dinakaran Trichy

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விற்பனை களைகட்டியது

தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் தீபாவளி பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் விற்பனை களை கட்டியது. சென்னையில் தி. நகரில் கூட்டம் வழக்கத்தை விட காலை முதல் அலைமோதியது. நேரம் ஆக, ஆக எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு, தனியார் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.

time to read

1 min

October 13, 2025

Dinakaran Trichy

ஆர்எஸ்எஸ் முகாமில் 4 வயது முதல் பாலியல் கொடுமை

இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு முன்னாள் தொண்டர் தற்கொலை

time to read

1 min

October 13, 2025

Dinakaran Trichy

ஓசூர் அருகே அதிகாலை சோகம் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி நான்கு வாலிபர்கள் பரிதாப பலி

தல தீபாவளி கொண்டாட கனடாவில் இருந்து வந்த புதுமாப்பிள்ளையும் சாவு

time to read

1 min

October 13, 2025

Dinakaran Trichy

Dinakaran Trichy

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டரிடம் எஸ்ஐடி கிடுக்கிப்பிடி

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டரிடம் எஸ்ஐடி நேற்று விசாரணை நடத்தியது. 4 துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடந்தது.

time to read

1 min

October 13, 2025

Dinakaran Trichy

மாஜி அமைச்சர் பாலத்துல பவனி வந்ததுக்கு காரணம் இதுதான் என்கிறார் wiki யானந்தா

\"மிக நீண்ட மேம்பாலத்தை சொந்தம் கொண்டாட இலை கட்சி வேண்டாத வேலையெல்லாம் செஞ்சு மக்கள் வெறுப்புக்கு உள்ளாயிருக்கு போல..\" என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

time to read

2 mins

October 13, 2025

Dinakaran Trichy

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் முன்னாள் தேவசம் போர்டு தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு

சபரிமலை கோயிலில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டிருந்த வாசல், நிலை மற்றும் 2 துவார பாலகர் சிலைகள் ஆகியவை செம்புத் தகடுகள் என்று கூறி பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

time to read

1 min

October 13, 2025

Translate

Share

-
+

Change font size