Prøve GULL - Gratis
தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு, சமூக அமைதி பாதிப்பு
Dinakaran Nagercoil
|December 05, 2025
தடுப்புகள் உடைப்பு, போலீஸ் மீது தாக்குதல்: மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு வாதம்
-
மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம.ரவிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட கோரியிருந்தார். இவ்வழக்கில் கடந்த 1ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு காவல்துறை தரப்பில் உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால் ராம. ரவிக்குமார் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், மனுதாரர் 10 பேருடன் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து மதுரை கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ரவீந்திரன், வீராகதிரவன் ஆகியோர் ஆஜராகி, “தனி நீதிபதி நேற்று முன்தினம் மாலை 6.05 மணிக்கு விசாரித்தபோது, தீபம் ஏற்றப்பட்டதா, இல்லையா என்றார். மனுதாரர் தரப்பு இல்லை என்றது. இதையடுத்து நீதிபதி உடனடியாக சிஐஎஸ்எப்பை அழைத்து உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக விசாரிக்கலாம். விளக்கம் கேட்கலாம். ஆனால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதி நீதித்துறை விதிகளை மீறி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவு என்பது சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில்தான் இருக்க வேண்டும்.
கடந்த 1862ம் ஆண்டு நடந்த வழக்கில் இல்லாததை தற்போது உத்தரவிட முடியாது. நூறு ஆண்டுக்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. ஒரு இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும். பல இடத்தில் தீபம் ஏற்றுவது மத நம்பிக்கையை புண்படுத்தும். அவமதிப்பு வழக்கிற்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இது சட்டமீறல். அரசு அப்பீல் செய்யவில்லை என்பது தவறு. உடனடியாக மனு செய்யப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பீல் செய்ய 30 நாள் அவகாசம் உள்ளது. தொடக்க நிலையிலேயே நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளதாக நீதிபதி முடிவுக்கு வந்துள்ளார்.
Denne historien er fra December 05, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
மணல் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
ஜென் ஜீ கதையில் கவுரி கிஷன்
எம்.எஸ். பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் - கவுரி கிஷன் ஆகியோர் 96 படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1' எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
ஜாதி, மதம், கடவுள் பெயரில் அரசியல் செய்யக்கூடாது
ஜாதி, மதம், கடவுள் பெயரில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
திருப்பரங்குன்றம் வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க கூடாது
முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் வலியுறுத்தல்
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி ஷூட்அவுட்டில் உருகுவே வேட்டையாடிய இந்தியா
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் உருகுவே அணியை, ஷூட் அவுட்டில் இந்தியா அபாரமாக வென்றது.
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
எழுதி கொடுத்ததை பேசி வரும் விஜய்
நடிகை கஸ்தூரி கலாய்
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி 2 இடங்களில் வாக்களித்தது எப்படி?
தேர்தல் ஆணையம் பதில் கூற இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
50 வயது நபருக்கு 6வது டும்...டும்...டும்... 23 வயது பெண்ணை விற்ற புரோக்கர்கள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொடைரோடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணுக்கு, திண்டுக்கல் பொன்நகரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
1 mins
December 11, 2025
Dinakaran Nagercoil
'நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்' பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் பேச்சால் அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு
சென்னை, வானகரத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மாநிலங்களவை அதிமுக எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பேசியதாவது:
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
திமுகவின் 2026 தேர்தல் பிரச்சார வியூகம் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையின் இரண்டாம் கட்டம் துவக்கம்
வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
1 mins
December 11, 2025
Listen
Translate
Change font size
