Prøve GULL - Gratis
ஔதாரி மருமகளால் குடும்பத்தில் புகைச்சல்!
Dinakaran Nagercoil
|October 05, 2025
அன்புள்ள டாக்டர், நான் எழுபது வயது இல்லத்தரசி. என் கணவருக்கு எழுபத்தைந்து வயதாகிறது. இருவருக்கும் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறோம். நான் திருமணமான புதிதில் என் கணவர் ஒரு ஹார்டுவேர் கடையில் வேலை செய்துகொண்டிருந்தார். பிறகு முதலாளியோடு ஒரு பிரச்னை உருவானதால் அவரும் அவரது நண்பரும் வெளியேறி ஒரு ஹார்டுவேர் கடையை தொடங்கினார்கள். நல்ல லாபம் வரத் தொடங்கியது. ஒரு பத்து வருடம் இருவரும் சேர்ந்து தொழில் செய்து வந்தார்கள். எல்லாம் நன்றாக இருக்கும்போதே இனி தனித்தனியாக இயங்குவோம் என முடிவெடுத்தார்கள். இருவரும் வேறு வேறு ஏரியாவில் ஆளுக்கொரு கடையைப் போட்டார்கள். இருவரும் பரஸ்பரம் உதவினார்கள். நன்றாக முன்னேறினோம். கடை இருக்கும் நகரத்திலேயே சொந்த வீடு, தோப்பு என்று வாங்கினோம். பார்ட்னரின் தொழிலும் நன்றாக முன்னேறியது. இப்போதும் அவர்களோடு நல்ல நட்பும் உறவும் உள்ளது. விசேஷ நாட்களில் இரு குடும்பங்களும் சேர்ந்து கொண்டாடுவது, இரு குடும்பங்களும் சேர்ந்து ஊருக்குச் செல்வது என்று மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

என் மகனுக்குத் திருமணமாகிவிட்டது. இரு குழந்தைகள் இருக்கிறார்கள். என் மருமகள் நல்லவள்தான். ஆனால், கை நிறைய செலவு செய்பவள். அவளுக்கு சிக்கனம் என்பதே என்னவென தெரியாது. நானும் பல முறை சொல்லிவிட்டேன். அவளோ வாழ்க்கை என்பதே வாழ்வதற்குத்தான் என்று தத்துவம் பேசுவாள். நாங்கள் குடியிருக்கும் வீட்டை வாஸ்து சரியில்லை என்று இடித்துக் கட்ட முடிவெடுத்தார்கள். அப்போது கொரோனா நேரம். ஏற்கெனவே தொழில் கொஞ்சம் டல்லாக இருந்தது. எனவே, நான் இப்போது வேண்டாம் கொஞ்சம் பொறுத்து செய்யலாமே என்றேன். என் மருமகளுக்குப் பொறுமையில்லை. காசு இல்லை என்று வங்கியில் கடன் வாங்கினார்கள். ஒருவழியாக வீட்டைக் கட்டி முடித்தோம். அது நடந்த ஒரே மாதத்தில் எங்கள் கடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மழை நாளில் எலெக்ட்ரிகல் ஒயர் ஷார்ட் சர்க்யூட் ஆகி மொத்தக் கடையும் தீ விபத்தில் சிக்கியது. பொருள் நஷ்டம். போலீஸ் பிரச்னை, தொழில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி, இன்சூரன்சில் போராட்டம், வீட்டுக்கடன் என்று எல்லாப்பக்கமும் பிரச்னைகள் சூழ்ந்தது. ஆனால், என் மருமகளோ இன்னமும் திருந்தியபாடில்லை. எப்போதும் போல செலவு செய்துகொண்டிருக்கிறாள். ஞாயிறுகளில் கணவனைக் கூட
Denne historien er fra October 05, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
சீமான், நடிகை விஜயலட்சுமி நிபந்தனையற்ற மன்னிப்பு
உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
விஜய் கூட்டத்தில் 41 பேர் மரணம் எஸ்.ஐ.டி. விசாரணையில் நம்பிக்கை உள்ளது
கரூரில் நடந்த 41 பேர் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.டி. குழு விசாரணையில் நம்பிக்கை உள்ளது என்று அன்புமணி கூறினார்.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
காசா இனப் படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
தெருக்கள், சாலை, நீர்நிலை, கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை
குடியிருப்பு தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 09, 2025
Dinakaran Nagercoil
சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி
அணையில் இருந்து அதிக நீர் திறந்ததால் பாதிப்பு
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
ஆந்திராவில் கோர சம்பவம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலி
ஆந்திராவில் நேற்று ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகள் அறிவிப்பு
உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்திற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
முதல்வர் அறிவித்தபடி முதற்கட்டமாக 23 பேருக்கு ரூ.15.50 லட்சம் நிவாரணம்
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட நவிமும்பை விமான நிலையம் திறப்பு
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிரான மனு நாளை விசாரணை
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
1 min
October 09, 2025
Translate
Change font size